👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சோழவந்தான் அருகே மாணவர்கள் இல்லாத அரசுப் பள்ளி, அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கவலையில் உள்ளனர்.சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்குட்பட்டது சித்தாதிபுரம் கிராமம். சுமார் எழுபது குடும்பத்தினர் வசிக்கும் இந்த ஊரில் கடந்த 1994ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியரால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளி நடைபெற்றது. அடிப்படை வசதிகள் இல்லாதது, கற்பித்தல் குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் நாளடைவில் இங்கு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.தற்போது 2 குழந்தைகள் மட்டுமே பள்ளியில் படிக்கின்றனர். ஒரு தலைமையாசிரியை மட்டும் தற்போது பெயருக்கு வந்து செல்கிறார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணிபுரியும் தலைமையாசிரியை உரிய நேரத்திற்கு வருவதில்லை என்று தங்கள் குழந்தைகளை வேறு ஊர் பள்ளிகளில் பெற்றோர்கள் சேர்த்து விட்டுள்ளனர்.ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பெயரவில் இரு குழந்தைகள் இருப்பதாக கணக்கு காட்டினாலும் அவர்களும் பள்ளிக்கு வருவதில்லை.
அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது வேறு ஊர்களிலிலிருந்து சில குழந்தைகளைக் கூட்டி வந்து கணக்கு காட்டுவதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை புகார் கொடுத்தும் கண்டு கொள்ளாத கல்வித்துறை அதிகாரிகள், குழந்தைகளை இங்கு சேர்த்து படிக்க வைக்குமாறு ஆலோசனைகள் கூறவுமில்லை. பள்ளியை மூடும் மனநிலையிலேயே கல்வித்துறை அதிகாரிகள் உள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருபத்து ஐந்து வருடங்களுக்கு முன் இவ்வூர் பெரியோர்களின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி அதிகாரிகளின் அலட்சியத்தால் மூடப்படும் நிலையிலிருப்பதை எண்ணி இவ்வூர் மக்கள் கவலையில் உள்ளனர். இதுகுறித்து இந்த ஊரைச் சேர்ந்த சாந்தி கூறுகையில், அதிக குழந்தைகள் படித்த இப்பள்ளியில், தற்போதுள்ள தலைமையாசிரியையால் நாளடைவில் குழந்தைகள் சேர்ப்பதை நிறுத்தி விட்டோம். உரிய நேரத்திற்கு வராமல் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்காமல் பெயரளவிற்கு வந்து செல்லும் இவரை மாற்றக்கோரி கூறி பலமுறை புகாரளித்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் எங்கள் ஊர் நிலக்கோட்டை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளோம்.உள்ளூரில் பள்ளி இருந்தும் சிறு குழந்தைகளை சுமார் இருபது கி.மீ தூரம் வேனில் மாதம் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து அனுப்புகிறோம். அத்துடன் இங்கு அங்கன்வாடியும் இல்லை. இப்பள்ளியை தொடர்ந்து செயல்படுத்த பெற்றோர்களை அழைத்து அதிகாரிகள் ஆலோசனைகள் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளே வராத பள்ளியில் ஆசிரியராக பெயரளவிற்கு உள்ள இந்த தலைமையாசிரியரை மாற்றி, அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய வேறு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அரசு பள்ளி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஒரு பள்ளியை மூடும் நிலைக்கு கொண்டு வந்த கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து பள்ளி இயங்கவும், மாணவர்களை மீண்டும் சேர்க்கவும் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு மதுரை கலெக்டருக்கு கோரிக்கை வைக்கிறோம் என்று கூறினார். இது குறித்து தலைமையாசிரியை மகேஸ்வரியிடம் கேட்ட போது பதிலளிக்க மறுத்து விட்டார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U