மத்திய அரசு பணிகளுக்கு நடத்தும் தேர்வுகள் எதிர்காலத்திலும் தமிழில் நடத்தப்படுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

மத்திய அரசு பணிகளுக்கு நடத்தும் தேர்வுகள் எதிர்காலத்திலும் தமிழில் நடத்தப்படுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எதிர்காலத்தில் மத்திய அரசு பணிகளுக்கு நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த வாரம் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. இதனால், தமிழகத்தில் தேர்வு எழுதிய ஆயிரக்கணக்கான பேர் தேர்வை சரியாக எழுத முடியாத நிலை ஏற்பட்டது. மத்திய அரசின் இந்த செயலுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு மாநில கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன. தமிழக எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்த்து குரல் எழுப்பினர். இந்நிலையில், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே தபால் துறை தேர்வு நடத்தும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன் வாதிடும்போது, தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்காதது சட்ட விரோதமானது. இந்தியாவில் 10 மாநிலங்களில் மட்டுமே இந்தி தாய்மொழியாக உள்ளது. மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்தி தாய்மொழி இல்லை. இந்தி மற்றும் ஆங்கில மொழியில் தேர்வு நடத்தப்பட்டதால் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தேர்வை ஒழுங்காக எழுத முடியாத நிலை ஏற்பட்டது. இந்தி மொழி தாய்மொழியாக அல்லாத மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் இத்தகைய நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வருங்காலங்களில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். அப்போது, பி.வில்சன், ‘‘தமிழ் மொழி இனி மெல்லச்சாவும்’’ என்ற வார்த்தையை இதுபோன்ற காரியங்கள் மூலம் உண்மையாக்கிவிடுவார்கள் என்று கூறினார். அதற்கு மத்திய அரசு வக்கீல் பெரும்பாலான வீடுகளில் பெற்றோரை தமிழில் அழைப்பதற்கு பதில் ஆங்கிலத்தில்தான் அழைக்கிறார்கள் என்றார்.இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா என்பது குறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews