பள்ளிக்கல்வி அமைச்சரை முற்றுகையிட்ட மாணவிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

பள்ளிக்கல்வி அமைச்சரை முற்றுகையிட்ட மாணவிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக, 2019-20ம் கல்வியாண்டிற்கான 11, 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை வகித்தார். பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலை வகித்தார். பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் 7113 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினிகளை பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி பேசினார். இதில் பெரும்புதூர் எம்எல்ஏ பழனி, காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி, மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பள்ளிக்கல்வித்துறையில் மாணவர்களுக்கு கவர்ச்சியான திட்டங்களை அறிவிப்பதில் அவ்வப்போது ஆர்வம் காட்டும் அமைச்சர் செங்கோட்டையன் அதனை முறையாக செயல்படுத்த முனைவதில்லை என பெற்றோர்கள் மத்தியில் பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில், காஞ்சிபுரம் காமராஜர் வீதியில் மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் வெளியே வந்தபோது, பிளஸ் 2 முடித்த 50க்கும் மேற்பட்ட மாணவிகள் திடீரென அவரை முற்றுகையிட்டு சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தங்களுக்கும் அரசின் இலவச மடிக்கணினி தரவேண்டும் என கோஷமிட்டனர். ஆனால் அமைச்சர் செங்கோட்டையன் விரைவில் தர ஏற்பாடு செய்வதாக மழுப்பலான பதிலை கூறி விட்டு சென்றார். இதனால் வந்திருந்த மாணவிகள், பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews