👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
“நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை மத்திய அரசு நிராகரித்திருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயல்” என்று தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.வைகோ(மதிமுக பொது செயலாளர்): நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்த செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வந்த செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.நீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புற பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில் கூட நினைக்க முடியாத நிலைமையை பாஜக அரசு உருவாக்கி இருக்கிறது.
இரா.முத்தரசன்(இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்): கடந்த இரண்டு ஆண்டு காலம் மவுனம் காத்திட்ட மத்திய அரசு, நீதிமன்றத்தில், பேரவையின் தீர்மானத்தை நாங்கள் நிராகரித்து விட்டோம் என்று தெரிவித்து இருப்பது கடும் அதிர்ச்சியளிக்கின்றது. நீட் நுழைவுத் தேர்வு காரணமாக தமிழகத்தை சேர்ந்த கிராமப்புறத்து மாணவர்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மற்றும் பழங்குடி மாணவர்கள் யாரும் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து மருத்துவர் ஆகும் கனவு பகல் கனவாகியுள்ளது. சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்து இருப்பது, ஒட்டு மொத்த தமிழகத்தையே மத்திய பாஜக அரசு நிராகரித்து, அவமானப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
மாநில நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளோம் என முதல்வர் திரும்ப, திரும்ப கூறிவரும் நிலையில் தற்போது என்ன செய்யப் போகின்றார் என்பது குறித்து விளக்கமளித்திட வேண்டும். டி.டி.வி.தினகரன்(அமமுக பொது செயலாளர்): நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு 2017ல் தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாக்களை நிராகரித்துவிட்டதாக இரண்டு ஆண்டுகள் கழித்து மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் கூறியிருப்பது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். இதன் மூலம் மத்திய அரசோடு சேர்ந்து மக்கள் விரோத எடப்பாடி அரசு, இரண்டு ஆண்டுகளாக நடத்தி வந்த மிகப்பெரிய நாடகம் அம்பலமாகி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U