👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைந்த வரலாற்றை, பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., சுரேஷ்ராஜன் வலியுறுத்தினார்.
சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
தி.மு.க., - துரை சந்திரசேகரன்: தஞ்சாவூர் மாவட்டம், ராஜேந்திரம் ஊராட்சியில் உள்ள, நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த, அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் செங்கோட்டையன்: அங்கு, எட்டாம் வகுப்பில், 11 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். கூடுதல் மாணவர்கள் சேர்ந்தால் பரிசீலிக்கப்படும்.
துரை சந்திரசேகரன்: இந்தலுார் ஊராட்சி உட்பட, பல்வேறு இடங்களில் உள்ள, உயர்நிலைப் பள்ளிகளை, மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க., - சுரேஷ்ராஜன்: நேசமணி உட்பட, பல்வேறு தலைவர்களின் போராட்டம் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம், தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைக்கப்பட்ட வரலாறை, பள்ளி பாடப் புத்தகத்தில் சேர்க்க வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: தேசிய தலைவர்களின் வரலாறை, படிப்படியாக, பள்ளிப் பாடங்களில் சேர்த்து வருகிறோம். நீங்கள் கூறியதையும், அரசு கவனத்தில் கொள்ளும்.
தி.மு.க., - சீதாபதி: என் தொகுதியில், தனியார் பள்ளி ஒன்றில், அடிப்படை வசதிகள் இல்லை. அப்பள்ளியை, அரசு ஏற்று நடத்த வேண்டும்.
அமைச்சர் செங்கோட்டையன்: தனியார் பள்ளியை, அரசு எடுப்பது சுலபமல்ல. ஆனால், அடிப்படை வசதிகள் செய்யாவிட்டால், அப்பள்ளி மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U