கவுரவ ஆசிரியர் நியமனம்; விரைவில் புதிய அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 01, 2019

கவுரவ ஆசிரியர் நியமனம்; விரைவில் புதிய அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 480 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் 87,535 மாணவர்கள் படித்து வருகின்றனர்.பதவி உயர்வு, பணி நிறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் கணிசமான அளவில் காலியாக ஏற்பட்டுள்ளன.மாநில அரசு நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் சூழலில் இந்த காலியிடங்களை உடனடியாக நிரப்புவது இயலாத காரியம். அதேவேளையில் அந்த காலியிடங்களை நிரப்பாவிட்டால் தேர்ச்சி சதவீதம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி,காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட, கவுரவ ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க பள்ளிக் கல்வித் துறை கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது.பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்பவர்கள், நேர்காணல் அடிப்படையில் விருப்பத்திற்கேற்ப காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவர்.
அதற்கு மாறாக, கவுரவ ஆசிரியர் தேர்வில் முதல் முறையாக சென்டாக்கில் பிராந்திய இட ஒதுக்கீடு வழங்குவதை போன்று ஆசிரியர் பணியிடங்கள் பிராந்திய ரீதியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது. இதற்கு புதுச்சேரி பொதுமக்கள், பட்டதாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.இதுதொடர்பாக கவர்னருக்கு புகார் சென்றது.இதனை தொடர்ந்து கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கு பிராந்திய ரீதியான விண்ணப்பம் பெறும் முறையை நீக்க கவர்னர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கல்வித் துறை, பிராந்திய ரீதியாக விண்ணப்பம் பெறும் முறையை நீக்கம் செய்வதற்கான கோப்பை, கவர்னருக்கு அனுப்பி வைத்திருந்தது. அந்த கோப்பிற்கு கவர்னர் கிரண்பேடி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.இதனால், கவுரவ ஆசிரியர் பணியிடத்திற்கு பிராந்திய ரீதியாக விண்ணப்பம் பெற்றது ரத்தாகிறது.காரணம் என்னஆந்திரா மாநிலத்தில் தெலுங்கானா மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக போர்க்கொடி எழுந்தபோது தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள பணியிடங்கள் அந்த பகுதி இளைஞர்களை கொண்டே நிரப்பப்படும் என்று அம்மாநில அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டபோது, இந்தியாவில் எந்த பகுதியிலும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஒரே மாநிலத்திற்குள் பிராந்திய ரீதியாக பிளவுப்படுத்தி விண்ணப்பங்கள் வாங்கக்கூடாது என தீர்ப்பு வழங்கி தெளிவுப்படுத்தி இருந்தது.இதனை சுட்டி காட்டியே புதுச்சேரி கவர்னரும், பிராந்திய ரீதியாக விண்ணப்பங்கள் பெறக்கூடாது என அறிவுறுத்தி இருந்தார். இதன்படியே தற்போது கவுரவ ஆசிரியர் பணி தேர்வுக்கு பிராந்திய தேர்வு முறை ரத்து செய்யபட்டுள்ளது. விண்ணப்பங்கள் கதிகவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். பிராந்திய ரீதியாக அறிவிப்பு ரத்து செய்யப்படுவதால் விரைவில் புதிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவேவிண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை.இதற்கான பூர்வாங்க பணிகளை பள்ளி கல்வித் துறை முடுக்கிவிட்டுள்ளது.காலி இடம் விபரம்புதுச்சேரி பிராந்தியம்: கவுரவபாலசேவிகா-87; பட்டதாரி ஆசிரியர் -6 இடம்.காரைக்கால் பிராந்தியம்: கவுரவ பாலசேவிகா-93; ஆரம்ப பள்ளி ஆசிரியர்-4; பட்டதாரி ஆசிரியர்- 21; கணிப்பொறி பயிற்றுநர்-4; விரிவுரையாளர்-23 இடம்.மாகி பிராந்தியம்: ஆரம்ப பள்ளிஆசிரியர்-4; பட்டதாரிஆசிரியர்-15; கணிப்பொறி பயிற்றுநர்-2; கவுரவவிரிவுரையாளர்- 11 இடம்.ஏனாம் பிராந்தியம்: பட்டதாரிஆசிரியர்கள்-22; கணிப்பொறி பயிற்றுநர்-2; கவுரவவிரிவுரையாளர்-3 இடம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews