ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர அனுமதி: யுஜிசி பரிசீலனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர அனுமதி: யுஜிசி பரிசீலனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பல பல்கலைக்கழகங்களிலோ ஒரே பல்கலைக்கழகத்திலோ ஒரே நேரத்தில் பல பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு அனுமதி வழங்குவது பற்றி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஆலோசிக்கிறது. இதைப் பற்றி ஆய்வு செய்து முடிவு எடுப்பதற்காக யுஜிசி துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரே பல்கலைக்கழகம் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ அல்லது பகுதி நேரமாகவோ இரு பட்டப்படிப்புகளை ஒரே நேரத்தில் பயில்வதில் உள்ள சாதக பாதக அம்சங்கள் குறித்து இந்தக்குழு ஆய்வு மேற்கொள்ளும். கடந்த 2012ஆம் ஆண்டிலேயே யுஜிசி இந்த விஷயத்தில் ஆய்வு நடத்தியது. அப்போதும் ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் அப்போதைய துணை வேந்தர் ஃபுர்கான் கமர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அதன் ஆலோசனைகளைப் பெற்றது. குறிப்பாக, ஒரு பட்டப்படிப்பில் சேரும் மாணவர், ஒரே நேரத்தில் அதிகபட்சமாக மேலும் ஒரு பட்டப்படிப்பில் சேர அனுமதிக்க வேண்டும் என அந்தக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது. அதே சமயத்தில் சில சட்ட கவுன்சில்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அடிப்படையில் அந்தக்குழு அறிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் அதனை பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்கட்ட பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பை வழங்கலாமா என்பதை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டிருக்கிறது எனவும் இந்தக் குழு கடந்த மாதமே அமைக்கப்பட்டுவிட்டது எனவும் யுஜிசி மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில், ஒரே பல்கலை அல்லது வெவ்வேறு பல்கலைகளில், இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க அனுமதிப்பது தொடர்பாக, யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானியக் குழு அமைத்து உள்ள சிறப்பு குழு ஆய்வு செய்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு பட்டங்கள் படிப்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, யு.ஜி.சி., சார்பில், 2012ல், ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆலோசனை ஐதராபாத் பல்கலை துணை வேந்தராக இருந்த, பர்ஹான் குமர் தலைமையிலான அந்த குழு, பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை நடத்தியது. 'ஒரு பல்கலையில், முழுநேரமாக பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது வேறொரு பல்கலையில், தொலைநிலை மூலம், மற்றொரு பட்டப் படிப்பை படிக்க அனுமதிக்கலாம்' என, அந்த குழு ஆலோசனை வழங்கியது. இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரிடம் கருத்து கேட்கப்பட்டது. ஆனால், இந்த திட்டம் செயல்பட்டு வரவில்லை.
முதல் கூட்டம் இந்நிலையில், ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகள் படிப்பதற்கு அனுமதிப்பது தொடர்பாக, புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி., துணைத் தலைவர் பூஷண் பட்வர்தன் தலைமையிலான இந்தக் குழு, கடந்த மாதம் அமைக்கப்பட்டது. இதன் முதல் கூட்டமும் நடந்துள்ளது.இது குறித்து, யு.ஜி.சி., அதிகாரிகள் கூறியதாவது: தற்போது தொழில்நுட்பம் பெரும் வளர்ச்சி அடைந்துள்ளது. மாணவர் விருப்பம் தொலைநிலை, அல்லது பகுதி நேரமாக, ஒரு பல்கலையில் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர், அதே பல்கலை அல்லது மற்றொரு பல்கலையில், மற்றொரு பட்டப் படிப்பை படிப்பதற்கு அனுமதி அளிப்பது குறித்து, இந்தக் குழு ஆய்வு செய்கிறது. வழக்கமான பட்டப் படிப்புடன், சிறப்பு அல்லது தனி திறன் பட்டப் படிப்பையும் படிக்க, மாணவர்கள் விரும்புகின்றனர். அதனால், இது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews