👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. இந்த நிலையில் தரவரிசைப்பட்டியலில் குளறுபடிகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வு முடிவு கடந்த மாதம் ஜூன் 5-ம் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான விண்னப்பம் ஆன்லைனில் பெறப்பட்டது. இதையடுத்து, மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. நாளை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இந்நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த 218 மாணவர்களுக்கு தமிழக தரவரிசைப் பட்டியலில் இடம் வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த மாணவர்கள் வேறு மாநில தரவரிசை பட்டியலிலும் இடம்பெற்றுள்ளதாகவும், போலி இருப்பிடச் சாண்று மூலம் தமிழக பட்டியலிலும் இடம் பெற்றிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த புகாருக்கு சான்றிதழ்கள் சரிபார்த்த பின்னரே இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் விளக்கம் அளித்துள்ளனர்.
நேற்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினர் உள்ளிட்ட சிறப்பு பிரிவிற்கான கலந்தாய்வு நடைபெற்றது. மாற்றுத்திறனாளிளுக்கான 127 இடங்களுக்கு 53 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விளையாட்டு பிரிவில் உள்ள 8 இடங்களுக்கு 40 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான 11 இடங்களுக்கு 40 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முதலில் மருத்துவப்பரிசோதனை நடைபெற்றது. இதில் தகுதி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் 127 இடங்களுக்கு 53 பேர் மட்டும் அழைக்கப்பட்டுள்ளதால், கலந்து கொண்ட அனைவருக்கும் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவப்படிப்பில் சேர இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U