👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அடுத்த அனகாபுத்தூரில் கடன் கொடுத்த பிரச்சனையால் அரசுப்பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனகாபுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக கிருபானந்தன் என்பவர் உள்ளார். அதே பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராகவும் அதிமுக நிர்வாகியுமான முரளிதரன் என்பவர் வங்கியில் லோன் வாங்கிக்கொடுத்து 5 லட்ச ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது.
வாங்கிய கடனை நீண்ட நாட்களாக முரளிதரனும் கொடுக்கவில்லை என தெரிகிறது. இந்நிலையில் முரளிதரன் வீட்டிற்கு சென்ற கிருபானந்தன் கடனை திரும்ப கேட்டுள்ளார். அப்போது முரளிதரன் தாக்கியதோடு கொலை மிரட்டலும் விடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த கிருபானந்தன் பள்ளிக்கு சென்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றிய சக ஆசிரியர்கள் தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அவர் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்தார்.
இதற்கிடையில் ஆசிரியரை தாக்கிய நபரை கைது செய்ய வலியுறுத்தி பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்துவந்த சங்கர்நகர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U