அடிப்படை வசதி செய்து தர கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

அடிப்படை வசதி செய்து தர கோரி பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்கள் போராட்டம்...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வேலூர் மாவட்டம் பேர்ணம்பட்டில் அடிப்படை வசதிகள் இல்லை என்று கூறி அரசு பள்ளிக்கு பூட்டு போட்டு மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பேர்ணம்பட்டில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் .அப்பள்ளியில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வரும் நிலையில். பள்ளிக்கு சுற்று சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து வகுப்பறைகளில் மது அருந்துவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பள்ளிக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொது மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் .உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews