மதுரை அருகே தனியார் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே ஆசிரியை குத்திக்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 22, 2019

மதுரை அருகே தனியார் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே ஆசிரியை குத்திக்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியின் வகுப்பறையில் மாணவர்கள் கண்முன்னே ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார். ஆசிரியை ரதி தேவியை குத்திக்கொலை செய்த முனீஸ்வரன் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் தனியார் பள்ளியில் பாடம் நடத்தி கொண்டிருந்த ஆசிரியை ரதிதேவியை 35, வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் குத்திக்கொலை செய்த கணவர் குருமுனீஸ்வரனை 37, போலீசார் கைது செய்தனர். இப்பள்ளியில் ஒரு மாதத்திற்கு முன் தற்காலிக ஆசிரியையாக பணியில் சேர்ந்தவர் ரதிதேவி. திருமணமாகி எட்டு ஆண்டுகளாகிறது. ஆறு வயதில் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். ராமநாதபுரம் ஓம்சக்தி நகரைச் சேர்ந்த கணவர் குருமுனீஸ்வரன் சிவில் இன்ஜினியர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றார். கடந்த ஆண்டு ஊர் திரும்பினார். வேலைக்கு செல்வது தொடர்பாக மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ஒரு ஆண்டாக பிரிந்து வாழ்கின்றனர். ரதிதேவி விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சித்தனேந்தலில் அவரது மாமா மகன் வீட்டில் தாயார், பிள்ளைகளுடன் தங்கி திருமங்கலம் பள்ளியில் 8ம் வகுப்பு ஆசிரியராக சேர்ந்தார். நேற்று பகல் 3:35 மணிக்கு ரதிதேவியை பார்க்க குருமுனீஸ்வரன் பள்ளி வகுப்பறைக்கு வந்தார். அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, குருமுனீஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தி, ஸ்குரூ டிரைவரால் ரதிதேவியை குத்தியதில் அதே இடத்திலேயே இறந்தார்.மாணவர்கள் அலறியடித்து ஓடினர். குருமுனீஸ்வரனை தப்பவிடாமல் பள்ளிக்கதவு பூட்டப்பட்டது. அருகில் உள்ள சிறிய வழியில் தப்ப முயன்ற அவரை பிடிக்க ஊழியர்கள் முயன்றனர். அவர் கத்தியை காட்டி மிரட்டினார். போலீசார் அங்கு வந்து குருமுனீஸ்வரனை கைது செய்தனர். பள்ளியை டி.எஸ்.பி., அருண் பார்வையிட்டார்.போலீசார் கூறியதாவது: குருமுனீஸ்வரன் வேலைக்கு போகாமல், குடிபோதையில் இருந்துஉள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டு பிரிந்தனர். சேர்ந்து வாழுமாறு பலமுறை ரதிதேவியிடம் அவர் கூறியதற்கு 'குடிக்காமல் ஒழுங்காக வேலைக்கு சென்றால்தான் சேர்ந்து வாழ்வேன்' என ரதிதேவி கூறி இருக்கிறார். பிள்ளைகளையும் தன் பொறுப்பில் வைத்துக்கொண்டார். இதை குருமுனீஸ்வரனால் ஏற்க முடியாததால், போதையில் பள்ளிக்கு வந்து கொலை செய்துள்ளார், என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews