👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டாஸ்மாக்கில் காலியாக உள்ள 500 இளநிலை உதவியாளர் தேர்வு சென்னை, மதுரை உள்ளிட்ட 9 மையங்களில் நடக்கிறது. தமிழகத்தில் 5 ஆயிரத்து 152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் 26 ஆயிரத்து 56 ஊழியர்கள் பல்வேறு பணிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு சிறப்பு தேர்வு நடத்தி 500 பேருக்கு டாஸ்மாக் நிர்வாகத்தில் இளநிலை உதவியாளர் பணி வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, இதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வுக்கு தடை விதித்தது. பின்னர், நடந்த விசாரணையில் தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், 500 பணியிடங்களுக்கான இளநிலை உதவியாளர் தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடத்தப்பட உள்ளது. இத்தேர்வை எழுத விண்ணப்பித்தவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பயிற்சி மையங்களில் டாஸ்மாக் அதிகாரிகள் மூலம் பயிற்சி வகுப்புகளும் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, பாடத்திட்டங்கள் குறித்தும், தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இதேபோல், தேர்வு நடத்தும் மையங்களை அமைப்பது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இளநிலை உதவியாளர் தேர்வு நடத்தப்படும் இடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு கலை கல்லூரி-கோவை, ஸ்ரீமீனாட்சி மகளிர் கலை கல்லூரி-மதுரை, ஈ.எம்.கோபாலகிருஷ்ண கோன் மகளிர் கலை கல்லூரி - மதுரை, அமெரிக்கன் கல்லூரி-மதுரை, ஜமால் முகமது கல்லூரி-திருச்சி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி-சேலம், ஸ்ரீகிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி- அண்ணாநகர் சென்னை, ஸ்ரீகிருஷ்ணசாமி மெட்ரிக் உயர்நிலைபள்ளி அண்ணாநகர் சென்னை ஆகிய 9 மையங்களில் தேர்வு நடக்கிறது. இந்த தகவலை டாஸ்மாக் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U