அரசு பள்ளியில் குவிந்த பெற்றோர்: குழந்தைகளின் டி.சி.யை கேட்டு வாக்குவாதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 09, 2019

அரசு பள்ளியில் குவிந்த பெற்றோர்: குழந்தைகளின் டி.சி.யை கேட்டு வாக்குவாதம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சேலத்தில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட அரசு பள்ளியில் நேற்று ஏராளமான பெற்றோர் முற்றுகையிட்டனர். பள்ளிக்கு பிள்ளைகளை விட வந்த தந்தையை சரமாரியாக போலீசார் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. டிசி கேட்டு இதர பெற்றோர் திரண்டதால், போலீசார் குவிக்கப்பட்டனர்.சேலம் அருகே அரசு மேல்நிலை பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவியை, அப்பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பாலாஜி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். புகாரின்படி கொண்டலாம்பட்டி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து உதவி தலைமை ஆசிரியர் பாலாஜியை கைது செய்தனர். இந்த தகவல் பரவியதும் கடந்த வெள்ளிக்கிழமை மாணவ,மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 5 மணி நேரம் நீடித்த போராட்டத்தை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தனர். அப்போது, கோஷம் எழுப்பியவர்களின் விவரங்களை போலீசார் சேகரித்து வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று காலை மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். சில மாணவிகளை பெற்றோர் பள்ளிக்கு டூவீலரில் அழைத்து வந்தனர். இதனிடையே பலாத்கார சம்பவத்தை கண்டித்து சில அமைப்பினர் போராட்டம் நடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் புஷ்பராணி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் காலையிலேயே குவிக்கப்பட்டிருந்தனர்.
அய்யம்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது மகன், மகளை டூவீலரில் பள்ளிக்கு அழைத்து வந்தார். இருவரையும் பள்ளியில் விட்டுவிட்டு, மாணவிக்கு நேர்ந்த கொடுமை பற்றி ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எஸ்ஐ ராமகிருஷ்ணனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார், செல்வராஜை குண்டுக்கட்டாக தூக்கி போலீஸ் வாகனத்தில் ஏற்றி சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இந்த தகவல் பரவவே ஏராளமான பெற்ேறார் பள்ளி முன் திரண்டனர். அவர்களை இன்ஸ்பெக்டர் புஷ்பராணி சமாதானப்படுத்தினார். சிறிது நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்தனர். அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் படிக்க வைக்கப்போகிறோம். மாற்று சான்றிதழ் (டிசி) தாருங்கள் என கோரி வாக்குவாதம் செய்தனர். அவர்களிடம், சங்ககிரி கல்வி அலுவலர் ராமசாமி, தலைமை ஆசிரியை அமுதா மற்றும் இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாணவிகள் வீட்டிற்கு வந்ததும் பெற்றோர் தினமும் பள்ளியில் என்ன நடந்தது என விசாரிக்க வேண்டும். ஏதேனும் பிரச்னை என்றால் தலைமை ஆசிரியர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினர். பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews