👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நிரந்தர கல்லூரிக்கல்வி இயக்குனரை நியமிக்க வேண்டும் என்று முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர்கல்வித்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இதுகுறித்து அவர் எழுதிய கடிதம்: காலியாக உள்ள கல்லூரிக்கல்வி இயக்குனர் பதவிக்கு முன்னுரிமை அடிப்படையில் மூத்த பேராசிரியர்களில் தகுதியான ஒருவரை முறைப்படி நியமிக்காமல் 9ம் இடத்தில் உள்ள ஒருவரை பொறுப்பு கல்லூரிக்கல்வி இயக்குனராக நியமித்ததால் அவருக்கு முன் உள்ள மூத்த இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்களின் முன்னுரிமையை பாதிக்கிறது. பொறுப்பு கல்லூரிக்கல்வி இயக்குனராக இளவயது உடையவரை நியமித்தது கண்டிக்கத்தக்கது. உயர்கல்வித்துறையில் உள்ள மேற்கண்ட தவறான நடவடிக்கையை களைந்து நிரந்தர கல்லூரிக்கல்வி இயக்குனரை நியமிக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில், தகுதிபட்டியலில் முதல் 5 இடங்களை பெற்றவர்களில் ஒருவரை தேர்வு செய்வது தான் நடைமுறை. உயர்கல்வித்துறை அதை செயல்படுத்தாமல், புறவாசல் வழியாக ஜோதி வெங்கடேஷ்வரனை பொறுப்பு கல்லூரி கல்வி இயக்குனராக நியமித்துள்ளது. அவரை நிரந்தர கல்லூரிக்கல்வி இயக்குனராக உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுப்பதாக அறிகிறோம்.தற்போது பொறுப்பு கல்லூரிக்கல்வி இயக்குனராக பணியாற்றும் ஜோதி வெங்கடேஷ்வரன் தனக்கு முன் சீனியாரிட்டி பட்டியலில் உள்ளவர்களை, தங்களுக்கு பதவி உயர்வு தேவையில்லை என்று கடிதம் கொடுக்குமாறு மிரட்டி வருகிறார். இது இளையர்கள் சீனியர்களை மிரட்டு பெற வழிவகை செய்யும் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதனால் சீனியாரிட்டி பட்டியலில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள ஒருவரை நிரந்தர கல்லூரிக்கல்வி இயக்குனராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U