👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உத்தர பிரதேசத்தில், உயரழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்ததில், &'ஷாக்&' அடித்து, 51 மாணவர்கள் காயமடைந்தனர்.உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்கு, பல்ராம்புர் மாவட்டத்தில் உள்ள, அரசு பள்ளியில், மரத்தின் கீழே வகுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக, காலணிகளை கழற்றிவிட்டு, கோணிப் பைகள் மீது அமருவதற்கு, மாணவர்கள் முயற்சித்தனர். அப்போது, திடீரென ஷாக் அடித்து, நகர முடியாமல் மாணவர்கள் திணறினர்; ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர்.என்ன நடக்கிறது என்பது புரியாமல், ஆசிரியர்கள் குழம்பினர்.அதன்பிறகு, பள்ளியின் வழியாகச் செல்லும், உயரழுத்த மின்சார கம்பி அறுந்து, பள்ளியில் உள்ள மரத்தின் மீது விழுந்து உள்ளது தெரிய வந்தது. தரை ஈரப்பதத்துடன் இருந்துள்ளதால், மாணவர்களுக்கு ஷாக் அடித்து உள்ளது. அதே நேரத்தில் காலணி அணிந்திருந்ததால், ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதையடுத்து, ஷாக் அடித்ததால் காயமடைந்த, 51 மாணவர்கள், அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக, மின்சார கம்பியை முறையாக பராமரிக்காத, மின்சார வாரியத்தின் ஒப்பந்த ஊழியர், பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். மற்றொரு அதிகாரி மீது, துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநில அரசிடம், தேசிய மனித உரிமை ஆணையம், விளக்கம் கேட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U