👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் முதல் சுற்று மாணவர்களுக்கு ஏற்கனவே கவுன்சிலிங் முடிந்து விட்டது. இரண்டாம் சுற்றுக்கு நாளை இட ஒதுக்கீட்டு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. முதல் சுற்றில் பங்கேற்றவர்களுக்கு கவுன்சிலிங் கமிட்டி சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதில் &'ஜூலை 17க்குள் அதாவது இன்றைக்குள் கல்லுாரிகளுக்கு சென்று இடங்களை உறுதி செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் மாணவர் சேர்க்கை கடிதம் ரத்தாகும்&' என குறிப்பிடப் பட்டுள்ளது.இந்நிலையில் முதல் சுற்றில் அண்ணா பல்கலையின் நேரடி கல்லுாரிகளான கிண்டி இன்ஜி. கல்லுாரி எம்.ஐ.டி. மற்றும் அழகப்ப செட்டியார் தொழில்நுட்ப கல்லுாரி ஆகியவற்றில் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கவுன்சிலிங் உத்தரவுடன் கல்லுாரிகளுக்கு இடங்களை உறுதி செய்ய சென்றனர்.ஆனால் பல்கலை அதிகாரிகள் அந்த மாணவர்களையும் பெற்றோரையும் திருப்பி அனுப்பி விடுகின்றனர். ஜூலை 24ம் தேதி முதல் மட்டுமே கல்லுாரிகளுக்கு வந்து சேர்க்கை பெற வேண்டும். அதற்கான கால அட்டவணையை கல்லுாரி இணையதளத்தில் பார்த்து கொள்ள வேண்டும்.அதையே பின்பற்ற வேண்டும் எனக்கூறி மாணவர்களை திருப்பி அனுப்புகின்றனர். அதனால் மாணவர்களும் பெற்றோரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒரு பக்கம் கவுன்சிலிங் கமிட்டியின் உத்தரவு மறுபக்கம் அண்ணா பல்கலையின் புறக்கணிப்பு என இதில் எதை பின்பற்றுவது என மாணவர்களும் பெற்றோரும் குழப்பத்தில் உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U