300 மாணவர்களுக்கு இலவச கல்வி: எம்.பி., பாரிவேந்தர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

300 மாணவர்களுக்கு இலவச கல்வி: எம்.பி., பாரிவேந்தர் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பெரம்பலுார் லோக்சபா தொகுதியை சேர்ந்த, 300 மாணவர்களுக்கு, இலவச கல்வி வழங்கப்படும்' என, எம்.பி., பாரிவேந்தர் நேற்று அறிவித்தார். செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக வளாகத்தில், பெரம்பலுார் லோக்சபா தொகுதி, எம்.பி., பாரிவேந்தர், நேற்று கூறியதாவது:என் தொகுதிக்கு உட்பட்ட, ஆறு சட்டசபை தொகுதிகளைச் சேர்ந்த, ஏழை மாணவர்கள் மற்றும் அதிக மதிப்பெண் எடுத்து, படிக்க முடியாத நிலையில் உள்ள மாணவர்களுக்கு, எஸ்.ஆர்.எம்., கல்வி குழுமம், இலவச கல்வி அளிக்கும் என, ஏற்கனவே அறிவித்தேன்.இதுபற்றி அறிந்ததும், பெரம்பலுார் லோக்சபா தொகுதியிலிருந்து, 1,200 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, 300 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதாவது, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 50 மாணவர்கள் வீதம் தேர்வாகி உள்ளனர்.
அவர்களுக்கு, எஸ்.ஆர்.எம்., கல்வி குழுமத்தில், இலவச கல்வி வழங்கப்படும்; தங்கும் இடமும், உணவும் இலவசம். இந்த மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், கல்வி ரீதியாக மேம்படுத்தப்படுவர். மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த, மத்திய பட்ஜெட் வரவேற்கத்தக்கது. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதை வரவேற்கிறேன்.இவ்வாறு, பாரிவேந்தர் கூறினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews