அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 18, 2019

அரசுப் பள்ளிகளை மூடும் முடிவு தற்போது இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஒரு சில பத்திரிக்கைகளில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு முற்றிலும் தவறு என்றும், இந்த ஆண்டு 2 லட்சம் மாணவர்கள் கூடுதலாக தான் சேர்க்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் இல்லாத பள்ளிகள் மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை அங்கு பள்ளிகளுக்கு பதிலாக நூலகம் இயக்கப்படும். ஒரு ஆசிரியரின் மாத ஊதியம் குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் ஆக உள்ள நிலையில், ஒருவருமே இல்லாத பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமித்து என்ன செய்வது. தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் குறைவான மாணவர்கள் உள்ளனர். இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றிவிட்டு, அந்த பள்ளிகளில் நூலகங்கள் ஆரம்பிக்கப்படும்மலேசியா நிறுவனங்களின் நிதி உதவியுடன் விரைவில், 20 லட்சம் மாணவர்களுக்கு இலவசமாக டேப் ( tap) வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
'தமிழகத்தில், 1,248 அரசு பள்ளிகள், நுாலகங்களாக மாற்றப்படும்,'' என, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, அரசின் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி, எம்.ஜி.ஆர்.நகர் பள்ளியில் நடந்தது. இதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியருக்கு, இலவச லேப்டாப் வழங்கும், ஒரே மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. 2017 - 18ல், பிளஸ் 2 படித்த மாணவ - மாணவியர் முதல், தற்போது பிளஸ் 2 படிக்கும் மாணவ - மாணவியர் வரை, அனைவருக்கும் மூன்று வாரங்களில், லேப்டாப் வழங்கும் பணி முடியும்.அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது; ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1,248 பள்ளிகளில், 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. இதில், பெரும்பாலான பள்ளிகளில், ஒரு மாணவர் கூட இல்லை.எனவே, இந்த பள்ளிகளை மூடுவதற்கு பதில், அவற்றை நுாலகங்களாக மாற்ற திட்டமிடப் பட்டுள்ளது. அங்குள்ள ஆசிரியர்கள், நுாலகர்களாக பணியாற்றலாம். மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, ஆசிரியர்களுக்கான புதிய பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் பேசினார். தமிழகத்தில் 1,248 பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர், இந்த ஆண்டு பள்ளி மாணவ, மாணவியருக்கு 15 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து பள்ளிகளும் இணையதள வசதிகளுடன் கணினி மயமாக்கப்படும். கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சமாக உயர்ந்துள்ளது.
அடுத்த ஆண்டு அரசுப்பள்ளியில் சேரும் மாணவர்களின் சேர்க்கை 5 லட்சமாக உயர நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு மாணவர்கள் கூட சேராத அரசுப்பள்ளிகள் உள்ளன என்பது உண்மை தான். தமிழகத்தில் 1,248 அரசுப்பள்ளிகளில் ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்கள் உள்ளனர். 45 அரசுப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை. ஆனால், இந்த பள்ளிகள் மூடப்படும் என்று பரவும் செய்தி பொய்யானது. மாறாக, இந்த 45 பள்ளிகள் அதே இடத்தில் நூலகங்களாக மாற்றப்படும். ஆசிரியர்கள் நூலகங்களில் பணிபுரியும்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். வரும் ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆனால் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் படிப்படியாக அந்தப் பள்ளிகளை மூடும் முயற்சிகள் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews