👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
குமரி அருகே அரசு பள்ளியில் பாட புத்தகங்கள் வழங்காததை கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் கடந்த 3ம் ேததி திறக்கப்பட்டது. பள்ளிகள் திறந்து ஒரு மாதத்தை எட்டும் நிலையில் குமரி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. அந்தவகையில் குமரி மாவட்டம் அருமனை அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளியில் 11, 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்கள் வழங்காததை கண்டித்து நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்தனர். தொடர்ந்து மாணவர்கள் பள்ளியின் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100 மாணவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், ‘புத்தகம் வழங்கு... புத்தகம் வழங்கு... அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கு. தனியார் பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி... அரசு பள்ளிகளை அழிக்க முயற்சிக்காதே...’ என்று தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, தலைமையாசிரியர், ஆசிரியர்கள் வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்ேபாது புத்தகங்கள் இன்று அல்லது நாளை வந்தவுடன் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், புத்தகம் உடனே வழங்கவேண்டும் என்று கூறி போராட்டத்தை ெதாடர்ந்தனர். இந்த தகவல் கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட கல்வித்துறை உயர் அதிகாரி, தலைமையாசிரியரை போனில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது 2 நாளில் புத்தகங்கள் வழங்கப்படும் என்று உறுதியளித்ததாக தெரிகிறது. இந்த தகவலை தலைமையாசிரியர் மாணவர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U