👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இலவச லேப்டாப் கேட்டு மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். தமிழகத்தில் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டு வருகிறது. 2017-18ம் கல்வியாண்டில் பிளஸ்-2 படித்த மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை. தற்போது படித்து வரும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதை கண்டித்து மாணவர்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மதுரை மாட்டுத்தாவணியில், எம்ஜிஆர் பேருந்து நிலையம் முன்பு மேலூர் மெயின் ரோட்டில் நேற்று காலை இந்திய மாணவர்கள் சங்கம் மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் லேப்டாப் வழங்கக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீசார், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்கள் மறியலை கைவிட்டு சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் கூறினர். மாணவர்கள் மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதனால் மாணவ, மாணவிகள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர் போலீசார், இந்திய மாணவர்கள் அமைப்பை சேர்ந்த 2 பேரை வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து சென்றனர். இவர்களை அண்ணாநகர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2017-2018ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு, லேப்டாப் வழங்கவில்லை.
இதையடுத்து, முன்னாள் மாணவர்கள் 50 பேர், நேற்று பள்ளிக்கு சென்று இலவச லேப்டாப் வழங்காதது குறித்து தலைமையாசிரியரிடம் முறையிட்டனர். அதற்கு அவர், இந்தாண்டு பயின்று வரும் மாணவர்களுக்குதான் ேலப்டாப் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் மாணவர்களுக்கு வழங்குவது குறித்து எந்தவிதமான தகவலும் தெரிவிக்கவில்லை என கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பள்ளிக்கு அருகே திருவண்ணாமலை- செங்கம் சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த டவுன் போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அதன்பேரில் மாணவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இதேபோல், செங்கம் அடுத்த மேல்பள்ளிபட்டு அரசு மேல்நிலைபள்ளியை சேர்ந்த 50 முன்னாள் மாணவர்களும் மேல்பள்ளிபட்டு பஸ் நிறுத்தம் அருகில் மறியலில் ஈடுபட்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U