பள்ளி மாணவியை உதைத்த தலைமையாசிரியை மீது வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 27, 2019

பள்ளி மாணவியை உதைத்த தலைமையாசிரியை மீது வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தஞ்சாவூர் அருகே, பள்ளி மாணவியை உதைத்ததாக, தலைமையாசிரியை மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். தஞ்சாவூர் அருகே, மேலத் திருப்பூந்துருத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், 65 மாணவர்கள் படித்து வருகின்றனர். தலைமையாசிரியை, சுந்தரி மற்றும் நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். தலைமையாசிரியை சுந்தரி, மாணவ - மாணவியரை தகாத வார்த்தைகளால் திட்டியும், அடித்தும் வருவதாக, திருவையாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அவர்களது பெற்றோர், சமீபத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில், மேலத் திருப்பூந்துருத்தியைச் சேர்ந்த, லியாகத் அலி, அப்பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கும், தன் பேத்தியை, தலைமை ஆசிரியை சுந்தரி, காலால் உதைத்ததாக, நடுக்காவேரி போலீசில் புகார் கொடுத்தார்.இதையடுத்து, தலைமை ஆசிரியை சுந்தரி மீது, வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews