ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவுகள்: 38,705 பேர் தகுதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 15, 2019

ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு முடிவுகள்: 38,705 பேர் தகுதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஐடி கல்வி நிறுவனத்தில் இளநிலை படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) முதன்மை தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. ரூர்கி ஐஐடி சார்பில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் 5,356 மாணவிகள் உள்பட 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி, ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜே.இ.இ. தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வு, ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடத்தப்படும். ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற முடியும்.
அதோடு, இந்த முதல்நிலைத் தேர்வில் தகுதிபெறும் முதல் 2.45 லட்சம் பேர் மட்டுமே ஜே.இ.இ. முதன்மைத் தேர்வை எழுதும் தகுதி பெறுவர். இந்த முதன்மைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் மட்டுமே நாடு முழுவதும் உள்ள ஐஐடி-க்களில் சேர்க்கை பெற முடியும். இந்த நிலையில், கடந்த மே மாதம் நடத்தப்பட்ட இந்த முதன்மைத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. இந்த முதன்மைத் தேர்வை 1 லட்சத்து 61,319 பேர் எழுதினர். இதில் 38,705 பேர் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5,356 பேர் மாணவிகள்.
மகாராஷ்டிர மாநிலம் பாலர்பூரைச் சேர்ந்த மாணவர் குப்தா கார்திகேய் சந்திரேஷ் 372-க்கு 346 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். அலாகாபாதைச் சேர்ந்த ஹிமான்ஷு கௌரவ் சிங் இரண்டாம் இடமும், புதுதில்லியைச் சேர்ந்த அர்ச்சித் பூப்னா மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். ஹைதராபாதைச் சேர்ந்த ஷப்னம் சஹாய் 372-க்கு 308 மதிப்பெண்கள் பெற்று மாணவிகளில் அளவில் முதலிடம் பிடித்துள்ளார் மும்பையைச் சேர்ந்த கார்த்திகே குப்தா சந்திரேஷ் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 372க்கு 346 மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். சுபம் சஹாய் என்ற மாதாபூரைச் சேர்ந்த மாணவி மாணவிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு 372க்கு 308 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன 2019 ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வில் மும்பையைச் சேர்ந்த மாணவர் கார்த்திகே குப்தா சந்திரேஷ் 346 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றுள்ளார். ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளன.
இதில் மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த கார்த்திகே குப்தா சந்திரேஷ் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். 372க்கு 346 மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். இத்தேர்வில் 38,705 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 5,356 பேர் மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேசிய அளவில் 10ஆம் இடம் பிடித்த சுபம் சஹாய் என்ற மாதாபூரைச் சேர்ந்த மாணவி மாணவிகளில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவருக்கு 372க்கு 308 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன. ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற, ஒவ்வொரு பாடப்பிரிவிலும் குறைந்தபட்சம் 10% மதிப்பெண்கள் பெற்றிருப்பதுடன் ஒட்டுமொத்தமாக 30% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். இந்த முறை கட்-ஆப் மதிப்பெண் 30க்குக் கீழ் குறையக்கூடும் எனக் கருதப்படுகிறது.
இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியல் பிரிவு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் பதிவு செய்த மொபைல் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும் அனுப்பப்படுகிறது. தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனியாக தரச்சான்றிதழ் (rank cards) வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ அடவான்ஸ் தேர்வில் தேர்வில் தேரச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படும். அதில் அவர்களுக்கு விருப்பமான கல்லூரியில் இடங்கள் ஒதுக்கப்படும். மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான என்ஐடி, ஐஐஐடி மற்றும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. மெயின் தேர்வு, ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும்.
ஜே.இ.இ. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறலாம். நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற ஜே.இ.இ. முதன்மைத் தேர்விலும் தகுதி பெற வேண்டும். இதில் 2019 ஆம் ஆண்டுக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வு, தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் கடந்த ஜனவரியிலும், ஏப்ரல் மாதத்திலும் இரண்டு முறை நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஜே.இ.இ. மெயின் தேர்வில் வெற்றி பெற்று தேசிய அளவில் முதல் 2,24,000 இடங்களைப் பெற்றவர்கள் அட்வான்ஸ் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். இவர்களில் 1,61,319 பேர் மட்டுமே ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வின் இரு தாள்களையும் எழுதியுள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews