👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சித்தூர் அருகே அரசு உண்டு, உறைவிட பள்ளியில் ஆய்வுக்கு வந்த கலெக்டர் நாராயண பரத்குப்தா மாணவர்களுடன் இரவு தங்கினார்.ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த வாரம் 13 மாவட்ட கலெக்டர்களுடன் மாநாடு நடத்தினார்.
இந்த மாநாட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை கண்டெடுத்து இடிக்க வேண்டும், கலெக்டர்கள் வாரம் ஒருமுறை அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, உண்டு, உறைவிட பள்ளிகளில் இரவு தூங்கி மாணவர்களின் கஷ்டங்களை அறிய வேண்டும் என்றார்.
இந்நிலையில் சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத்குப்தா நேற்று முன்தினம் இரவு பெனுமூர் மண்டலத்தில் உள்ள எஸ்சி மாணவர்களுக்கான அரசு உண்டு, உறைவிட பள்ளிக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர், கழிவறை போன்றவை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை பெற்று அவர்களுடன் ஒன்றாக உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து இரவு மாணவர்கள் தூங்கிய அறையிலேயே கலெக்டர் நாராயண பரத் குப்தா உட்பட அதிகாரிகள் படுத்து தூங்கினர். பின்னர் காலையில் அனைவரும் எழுந்து அங்கிருந்து புறப்பட்டனர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U