👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு உதவி பெறும் பள்ளிகள் இனி அரசு உதவி பெறும் பள்ளி என்று அறிவிப்பு பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும் என்றும் அதை ஆய்வு செய்யுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 2008ம் ஆண்டு அனைத்து பள்ளிகளும் பொதுப்பள்ளிகளாக அறிவிக்கப்பட்டன.
அவற்றில் சில பள்ளிகள் பள்ளியின் பெயருக்கு பின்னால் பப்ளிக் ஸ்கூல் என்று சேர்த்து பெயர் பலகை வைத்துள்ளனர்.தனியார் பள்ளிகளை போன்ற உள்கட்டமைப்பு வசதிகள், செய்யப்பட்டு சில பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன. மாணவர்களின் கல்விக்காக அரசிடமிருந்து நிதி பெறும் பள்ளிகளை பெற்றோர், மாணவர்களால் பிரித்து அறிய முடியாத சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முதன்மை கல்வி அலுவலர்கள்/ மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அரசு உதவி பெறும் பள்ளி என்று பெயர் பலகை வைத்திருப்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது:
‘‘தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு (2016-18) ஆண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை குறித்த அறிக்கையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரசு உதவி பெறும் பள்ளி என்று பெயர் பலகையில் குறிப்பிடாமல், பள்ளிகளின் பெயர் மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசு உதவி பெறும் பள்ளியை தனியார் பள்ளி என்று நினைத்துக்கொள்கிறார்கள்.
அவ்வாறு இருக்கும் நிலையில் ஆங்கிலத்தில் ‘‘government aided school’’ என்றும், தமிழில் ‘‘அரசு உதவிபெறும் பள்ளி’’ என்று குறிப்பிடாமல் உள்ளனர் என்று சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு சார்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது, அதை அரசு ஏற்கிறது.எனவே முதன்மை கல்வி அலுவலர்கள்/மாவட்ட கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ‘‘அரசு உதவி பெறும் பள்ளி’’ என்று பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். அதோடு முதன்மை கல்வி அலுவலர்கள்/ மாவட்ட கல்வி அலுவலர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யும்போது, பெயர் பலகையில் அரசு உதவி பெறும் பள்ளி என்று குறிப்பிடப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.’’ இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரின் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U