பி.இ.: இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 25, 2019

பி.இ.: இன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2019-20-ஆம் கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 25) தொடங்குகிறது. முதல் நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கான சேர்க்கை நடத்தப்பட உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் சார்பில் நடத்தப்படும் இந்த கலந்தாய்வைப் பொருத்தவரை, முதல் மூன்று நாள்கள் நடைபெறும் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு மற்றும் பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இரண்டும் சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு முறையில் நடத்தப்படும். அதன் பின்னர் ஜூலை 3-ஆம் தேதி தொடங்கும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஆன்-லைன் முறையில் நடத்தப்படும். இந்த ஆன்-லைன் கலந்தாய்வில் மாணவர்கள், அவர்களின் வீட்டில் இருந்தபடியே பங்கேற்க முடியும். இந்த நிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் முதல் நாள் கலந்தாய்வு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இரண்டு பிரிவுகளாக காலை 9.30 முதல் பகல் 12.30 மணி வரை 80 பேருக்கும், மதியம் 1.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மீதமுள்ள 58 பேருக்கும் சேர்க்கை நடத்தப்பட உள்ளது. இரண்டாம் நாளான புதன்கிழமை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 7 பிரிவுகளாக சேர்க்கை நடத்தப்பட உள்ளது. மூன்றாம் நாளில் 8 பிரிவுகளாக விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 26 முதல் 28 வரை சேர்க்கை நடக்கவுள்ளது. இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்கு, தமிழக உயர் கல்வித்துறை சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த கவுன்சிலிங்குக்கு, 1.03 லட்சம் பேர்,தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.இந்த ஆண்டு, 1.73 லட்சம்இடங்கள், அரசு ஒதுக்கீட்டு பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இன்ஜினியரிங் படிப்பிற்கான நேரடி ஒற்றை சாளர கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. இன்று, மாற்று திறனாளிகளுக்கும், நாளை,முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், நேரடி கவுன்சிலிங் நடக்கிறது. நாளை மறுநாள், விளையாட்டு பிரிவுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.நாளை முதல், 28ம் தேதி வரை, தொழிற்கல்வி மாணவர்களுக்கும், கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப் பாட பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 3ல், 'ஆன்லைன்' கவுன்சிலிங் துவங்க உள்ளது. இதற்காக, மாநிலம் முழுவதும், கவுன்சிலிங் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் தகவல்களை, tneaonline.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews