👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு மற்றும் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் விரைவில் நடத்தவுள்ள ஆன்லைன் கவுன்சலிங் குறித்த விழிப்புணர்வு மற்றும் ‘தொலைநோக்கு 2019’ என்ற கருத்தரங்கு சென்னையில் நடந்தது.கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் தலைமை வகித்தார். செயலாளர் பி.செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணை தலைவர் ஆர்.எஸ்.ரகுராம் வரவேற்றார். தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார். இதில் 500க்கும் மேற்பட்ட பெற்றோர்களும், மாணவர்களும் பங்கேற்றனர்.இந்த கருத்தரங்கில் அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் கே.விவேகானந்தன், ஐ.சி.டி. அகாடமியின் செயல் துணை தலைவர் பி.அன்புதம்பி, இன்போசிஸ் நிறுவன மனிதவள மேம்பாட்டு பிரிவின் துணை தலைவர் சுஜித்குமார் மற்றும் கே 7 கம்ப்யூட்டிங் நிறுவன முதன்மை செயல் அதிகாரி கே.புருஷோத்தமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
கருத்தரங்கில் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம் பேசுகையில், ‘‘பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு குறைந்து விட்டதாக ஒரு பரவலான தகவல் உள்ளது. ஆனால் உண்மையில் 2017-18ம் ஆண்டில் 1.20 லட்சம் பொறியியல் மாணவர்களும், 2018-19ம் ஆண்டில் 1.50 லட்சம் பொறியியல் மாணவர்களும் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.பொறியியல் படிப்பின் பல்வேறு துறைகளிலும் வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும், சிறந்த பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.மாணவர்கள், படிப்போடு துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், அயல் நாட்டு மொழிகள், மென் திறன்கள் போன்றவற்றையும் கற்றுக் கொண்டால் வேலை கிடைப்பது நிச்சயம். எனவே பொறியியல் படிப்பை மாணவர்கள் நம்பிக்கையோடு படிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U