தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2019 , முதலாம் ஆண்டு பி.இ, பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் , அண்ணாப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான இணையதளம் முலம் விண்ணப்பிக்கலாம்.
* பிளஸ்டூ தேர்ச்சிப்பெற்ற விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவர்கள் https://www.tneaonline.in , http://www.tndte.gov.in என்ற இணையத்தளத்தின் முலம் விண்ணப்பிக்க வேண்டும்.
* ஆன்லைன் முலம் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
அது குறித்தும் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
*விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் விண்ணப்பத்தின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் ஆகிய இணையதளம் முலம் செலுத்தலாம்.
*ஆன்லைன் முலம் பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை டிடி யாக எடுத்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தில் அளிக்கலாம்.
* ஆன்லைன் முலம் மே 2-ம் தேதி முதல் (இன்றுமுதல்) 31-ம் தேதி வரையில் விண்ணப்பிக்க முடியும்.
* மாணவர்கள் விண்ணப்பிக்கும் போதே அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்தினை மாணவர்கள் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும்.
* சான்றிதழ் சரிபார்ப்பு தேதி , நேரம் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் ஆகிய விபரங்களை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் மற்றும் இமெயில் வாயிலாக தெரிவிக்கப்படும்.
* கண்டிப்பாக சரியான இ மெயில் ஐடி மற்றும் சரியான செல்போன் எண்ணை வழங்கவும். அதன்மூலம் மட்டுமே அனைத்து தகவல்களும் மாணவர்களுக்கு வரும்.
* சான்றிதழ் சரிபார்ப்பின் போது மாணவர்கள், உரிய நாட்களில் விண்ணப்பப் படிவத்துடன் அசல் சான்றிதழ்கள் மற்றும் நகல்களுடன் தங்களுக்கான சேவை மையத்தில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்ய வேண்டும்.
* விளையாட்டு ஒதுக்கீட்டிற்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் சென்னையில் மட்டுமே நடைபெறும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னையில் மட்டுமே நடைபெறும் .
இது குறித்த பிற விபரங்களுக்கு 044-22351014 , 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.