பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 02, 2019

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
சென்னை மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் எத்தனை பேர், படிப்பை பாதியில் நிறுத்திய குழந்தைகள் எத்தனை பேர் என்ற விவரங்கள் மே மாதம் முழுவதும் வீடு வீடாக கணக்கெடுக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ஏ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின்கீழ் பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கணக்கெடுக்கப்படும். அந்த வகையில், 2019-ம் ஆண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா குழந்தைகள், இடைநின்ற குழந்தைகள் மற்றும் ஒன்று முதல் 18 வயதுடைய மாற்றுத்திறன் உடைய குழந்தைகளை பற்றிய கணக்கெடுப்பு பணி மே மாதம் முழுவதும் நடைபெற உள்ளது. இப்பணியானது குடியிருப்பு வாரியாக வீடு வீடாக நடத்தப்படும்.
குறிப்பாக தொழிற்சாலை, ரயில் நிலையம், பேருந்து நிலையம், கட்டிடப்பணி நடைபெறும் இடங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் கணக்கெடுப்பு பணி, தொழிலாளர் நலத் துறை, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, சைல்டு லைன் அமைப்பு, சமூக பாதுகாப்புத் துறை, காவல்துறை ஆகிய துறையினருடன் இணைந்து கூட்டு ஆய்வு முறையில் நடைபெறும். இப்பணியில் மண்டல மேற்பார்வையாளர், ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் ஈடுபடுவர்.
பள்ளிகளில் சேர்க்கப்படுவர்: இக்கணக்கெடுப்பில் கண்டறியப்படும் பள்ளி செல்லா குழந்தைகள், படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள், மாற்றுத்திறனாளி குழந்தைகள் முதலில் அருகில் உள்ள பள்ளிகளில் வயதுக்கு ஏற்ற வகுப்புகளில் சேர்க்கப்படுவர். அதன் பின்பு கற்றல் திறன் அடிப்படையில் சிறப்பு பயிற்சி மையங்கள் மற்றும் உண்டுஉறைவிட சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்கப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு கல்வி ஆண்டின் இறுதியில் முறையான பள்ளிகளில் சேர்க்கப்படுவர்.
மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பொருத்தவரையில், அவர்கள் உடல்நிலைக்கு ஏற்றாற்போல் வீட்டுவழிக் கல்வி, பள்ளி ஆயத்தப் பயிற்சி மையம், முறையான பள்ளி ஆகியவற்றில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுவார்கள். கணக்கெடுப்பு பணி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளரை 97888-58507, 97888-58382 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews