தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 17, 2019

தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க கோரி வழக்கு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் ரயில் நிலைய அலுவலர், லோகோ பைலட் உள்ளிட்ட பணியிடங்களில் தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தெற்கு ரயில்வே பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணவாளன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில் பாதையில் கடந்த 8-ம் தேதி எதிர் எதிரே ரயில்கள் வந்தன. கடைசி நேரத்தில் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் ரயில்வே நிர்வாகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதை உணர்த்தியுள்ளது. பொதுவாக ரயில்வே ஊழியர்களுக்கான தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தி மொழியிலேயே நடைபெறுகிறது. இதனால் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழி தெரிந்தவர்கள் திறமையிருந்தும் வெற்றிபெற முடியாத நிலை உள்ளது. இந்தியில் தேர்வு நடைபெறுவதால் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தேர்வாகின்றனர். தமிழகத்தில் ரயில்வே பணியாளர்களில் 15 முதல் 20 சதவீதம் பேர் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள்.
ரயில் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நிலைய அலுவலர், லோகோ பைலட், கார்டுகள், பாயிண்ட்ஸ்மேன் உள்ளிட்ட பணிகளில் இருப்பவர்களிடையே அடிக்கடி தகவல் பரிமாற்றம் நடைபெறும். அப்படியிருக்கும்போது இப்பணியில் இருப்பவர்கள் அந்தந்த மாநிலத்தின் தாய் மொழி தெரிந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள ரயில்வே பணிகளில் இருப்பவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழ் தெரியவில்லை. கள்ளிக்குடி - திருமங்கலம் ரயில் பாதையில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் வந்ததற்கு ஊழியர்களிடையே இருந்த மொழிப் பிரச்சினைதான் காரணமாக சொல்லப்படுகிறது.
எனவே, தமிழகத்தில் ரயில் நிலைய அலுவலர், லோகோ பைலட், கார்டுகள், பாயிண்ட்மேன் போன்ற பணியிடங்களில் தமிழ் நன்கு தெரிந்தவர்களை மட்டும் நியமிக்க ரயில்வேக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு, நீதிபதிகள் நிஷாபானு, தண்டபாணி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியன் வாதிட்டார். மனு தொடர்பாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews