👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு என்.டி.ஏ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தேர்வு நடத்தும் என்.டி.ஏ மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
* நீட் இணையதளத்தில் உள்ள நேரமே அனைத்து தேர்வு மையங்களிலும் பின்பற்றப்படும்.
* பிற்பகல் 1.30 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டும்.
* பிற்பகல் 1.30 மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கும்.
* தேர்வு மையத்திற்குள் துண்டுத் தாள்கள், பென்சில் டப்பாக்கள், பர்சுகள், பேனா, அளவுகோல், எழுத்து அட்டை, அழிப்பான், லாக் புத்தகம், ஸ்கேனர் போன்றவற்றை எடுத்து வரக் கூடாது. மேலும் கால்குலேட்டர், பென்ட்ரைவ், கைப்பேசி, ப்ளூடூத், ஹியர்போன், மைக்ரோபோன், பேஜர், ஹெல்த்பேண்ட் உள்ளிட்டவையும் தடை செய்யப்பட்டுள்ளன.
* கை கடிகாரம், கை செயின், வாலட், கண்ணாடி, பெல்ட், தொப்பி போன்றவற்றை தேர்வு எழுதும் அறைக்குள் அணிந்துவரக்கூடாது. மேலும் மோதிரம், தோடு, மூக்குத்தி, செயின், பேட்ஜ் உள்ளிட்டவையும் தேர்வு மையத்திற்குள் தடை செய்யப்பட்டுள்ளன.
* உணவு பொருட்கள், தண்ணீர் பாட்டில் போன்றவற்றிற்கும் தேர்வு மையத்திற்குள் அனுமதி இல்லை.
* அரைக்கை கொண்ட லேசான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆடைகளில் பெரிய பொத்தான்களோ பேட்ஜ்களோ இருக்கக் கூடாது.
* கலாசாரம், நம்பிக்கை சார்ந்த ஆடைகளை அணியும் மாணவர்கள் பகல் 12.30 மணிக்கே தேர்வு மையத்தினுள் இருக்க வேண்டும்.
* ஹீல்ஸ் அல்லாத செருப்புகளையே அணிய வேண்டும். ஷூக்கள் அனுமதிக்கப்படாது.
* ஆதார் போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற புகைப்படத்துடன் கூடிய ஆவணத்தை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U