கொடைக்கானல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூவர் பலி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

கொடைக்கானல் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர்கள் மூவர் பலி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே, ஆற்றில் தவறி விழுந்து, பள்ளி மாணவர்கள், மூன்று பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள், தனுஷ், 16, ஜெகதீஷ், 14. இவர்கள், 10 மற்றும், எட்டாம் வகுப்பு முடித்துள்ளனர்.அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ், 16, பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்.மூவரும், சிறுவர்களுடன் சேர்ந்து, குறிஞ்சிநகர் அருகில், 'மணியாறு கெஜம்' என அழைக்கப்படும் பள்ளத்தாக்கில், ஆற்றில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்க சென்றனர்.
ஜெகதீஷ் தவறி விழுந்தார். அவரை காப்பாற்ற இறங்கிய தனுஷ் மற்றும் லுாயிஸ் ஆனந்தராஜும் தண்ணீரில் மூழ்கினர். உடன் விளையாடிய மற்ற சிறுவர்கள், அக்கம், பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.தீயணைப்புத் துறையினர், போலீசார் வந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின், மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன. கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews