👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
அரசிடம் இருந்து தனிப்பட்ட முறையில் தனக்கு அழுத்தம் எதுவும் இல்லை என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். கிண்டி பொறியியல் கல்லூரி துவங்கிய 225ஆம் ஆண்டு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுரப்பாவிம் அண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக எழுந்த புகார் குறித்து கேட்டபோது, முக்கியமான பொறுப்புகளை வகிப்பவர்களுக்கு சமூக ரீதியாகவும் மற்ற சில இடங்களில் இருந்தும் அழுத்தம் வருவது இயல்பு என்றார். தமக்கு தேவையான எல்லா ஒத்துழைப்பும் கிடைக்கிறது என்றும், தனிப்பட்ட ரீதியில் அரசிடம் இருந்து அழுத்தம் எதுவும் இல்லை என்றும் சுரப்பா கூறினார்.
சமூகத்தில் எதிர்மறை கருத்துகளை உருவாக்கும் என்பதாலேயே, 92 கல்லூரிகளில் 300 பாடபிரிவுகள் மூடப்பட்ட விவகாரத்தில் கல்லூரிகளின் பெயர்களை வெளியிடவில்லை என்று சுரப்பா பதிலளித்தார். ஆறு கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட தேர்வாகாத விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது என்றும் குறிப்பிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U