தனியார் பள்ளிப்படிப்பு சிறந்தது என்பது வெறும் மாயை தான்: செங்கோட்டையன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

தனியார் பள்ளிப்படிப்பு சிறந்தது என்பது வெறும் மாயை தான்: செங்கோட்டையன்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
இந்தியாவிலேயே இல்லாத அளவுக்கு தமிழகத்தில் தான் மாநிலக்கல்வி பாடத்திட்டம் சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் எந்த குறையும் இல்லை; தரமானதாக உள்ளது என்று பலரும் பாராட்டி உள்ளனர். நீட், ஐஐடி உள்ளிட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கு ஏற்ப நமது பாடத்திட்டம் உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள எந்த தேர்வாக இருந்தாலும், 80 சதவீத பதில்கள் தமிழக கல்வித்துறை உருவாக்கியுள்ள பாடத்திட்டத்தில் உள்ளது. அந்த அளவுக்கு மாநிலக்கல்வி பாடத்திட்டத்தை தரமாக கொண்டு வந்துள்ளோம். இன்னும் மாநிலக்கல்வி பாடத்திட்டத்தை மேம்படுத்தப்போகிறோம். மத்திய பாட திட்டத்துக்கு ஈடாக மாநில கல்வி திட்ட பாடங்கள் சிறப்பாக அமைவதில் நாங்கள் முனைப்போடு தான் உள்ளோம். மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், கட்டாயத்தின் பேரில் தான் வேறுவழியின்றி தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது. இருப்பினும் மாணவர்களின் நலன்கருதி மாநிலம் முழுவதும் 413 பயிற்சி மையங்கள் வாயிலாக, மாணவர்களுக்கு நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வு முறை அமல்படுத்தும் போது ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தால் கூட இனி வரும் ஆண்டுகளில் எந்த பிரச்னையும் இருக்காது; முழு அளவில் பயிற்சி பெற எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கண்டிப்பாக தமிழகம் தான் நீட் தேர்வில் முதலிடத்தில் வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும், அடுத்துவரும் ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வில் பங்கேற்பர். அதுபோல, அதிக அளவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான் தேர்ச்சி பெறப்போகிறார்கள் என்பது நிதர்சமான உண்மை. மெட்ரிக், சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் படித்தனர். அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் இந்த மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த வருடம் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் தான் சிபிஎஸ்இ படித்தால் நீட் தேர்வு எழுத முடியும் என்று கூறி வருகின்றனர் சிலர். அவர்கள் தான் பெற்றோர்கள் மத்தியில் தனியார் பள்ளி சிறந்தது என்பது போன்ற மாயையை உருவாக்கி வருகின்றனர். இது வெறும் மாயை தான்.
அரசு பள்ளிகள் மூலம் நாம் முழுக்க, முழுக்க இலவச கல்வியை கொடுக்கிறோம். இன்னும் தரமான பாடத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டு மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் சிறந்த கல்வி கிடைக்க வழிவகை செய்யப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. அதற்கான அனைத்து வசதிகளையும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறது. தனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்கள் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளோம். அரசு பள்ளிகளில் எதுவும் இல்லை என்ற நிலை இல்லை.தற்போது நீட் தேர்வில் எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். கடந்தாண்டை பார்க்கும் போது, இந்தாண்டு குறைந்தபட்சம் 50 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள். நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. ஆனால், கட்டாயத்தின் பேரில் தான் வேறுவழியின்றி தமிழகத்தில் நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews