மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்: ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும்: ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் 211 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், 70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 83 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாநகராட்சி கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களின் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று பேசியதாவது:
மாநகராட்சி பள்ளிகளில் ஆரோக்கியமான கல்விச்சூழலை மாணவர்களுக்கு உருவாக்கும் வகையில் பள்ளிகளில் தரமான உள்கட்டமைப்பு, சுத்தமான குடிநீர், கழிவறைகள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை நல்ல முறையில் பராமரிப்பதை தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களின் அறிவுத்திறன், செயலாற்றல் ஆகியவற்றை ஊக்குவித்து வளரச் செய்து, அவர்களது செயல் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்த்து முழு அளவில் வெளிக்கொணர வேண்டும்.
மாறிவரும் சூழலுக்கேற்ப தேவைகளின் அடிப்படையில் புதிய கருத்துக்களை கற்றல், கற்பித்தலில் மாறுதல் செய்ய வேண்டும். எவ்வித போட்டித் தேர்வுகளையும், எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களின் திறனை முழுமையாக வளர்த்திட வேண்டும். மேலும், மாநகராட்சி பள்ளிகளில் தரமான கல்வியினை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து, அக்குழுவின் அறிவுரைகளின்படி அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவ்வாறு மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் (பெ.குமாரவேல் பாண்டியன், கல்வி அலுவலர் இ.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews