உலக வரலாற்றில் இன்று ( மே 8) - உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day) - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

உலக வரலாற்றில் இன்று ( மே 8) - உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் (International Red Cross and Red Crescent Day)

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நிகழ்வுகள்
1450 – இங்கிலாந்தில் கென்ட் நகரில் ஆறாம் என்றி மன்னருக்கெதிராக ஜாக் கேட் என்பவன் தலைமையில் கிளர்ச்சி இடம்பெற்றது.
1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
1821 – கிரேக்க விடுதலைப் போர்: கிரேக்கர்கள் துருக்கியர்களை கிராவியா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தனர்.
1842 – பாரிசு நகரில் தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீப்பிடித்ததில் 200 பேர் வரை உயிரிழந்தனர்.
1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.
1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.
1912 – பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1927 – பாரிசில் இருந்து நியூ யார்க் வரை வானூர்தியில் முதல்தடவையாக இடைத்தங்கல் எதுவுமின்றி பறந்து சாதனை படைக்க முயன்ற பிரான்சியப் போர் வீரர்கள் சார்லசு நுங்கெசர், பிரான்சுவா கோலி ஆகியோர் இடையில் காணாமல் போயினர்.
1933 – மகாத்மா காந்தி தலித் மக்களின் நலனுக்காக 21-நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்.
1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் பேரரசின் வானூர்தி தாங்கிக் கப்பல் அமெரிக்கக் கடற்படையின் லெக்சிங்டன் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததை அடுத்து பவளக் கடல் சமர் முடிவுக்கு வந்தது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்தன.
1945 – அல்ஜீரியாவின் சேட்டிஃப் என்ற இடத்தில் நூற்றுக்காணக்கான அல்ஜீரியர்கள் பிரெஞ்சுப் படைகளினால் கொல்லப்பட்டனர்.
1946 – எசுத்தோனிய பள்ளி மாணவிகள் இருவர் தாலின் நகரில் அமைக்கப்பட்டிருந்த சோவியத் நினைவகத்தைத் தகர்த்தனர்.
1963 – கத்தோலிக்க அரசுத்தலைவர் நியோ டின் தியெம் கீழிருந்த தென் வியட்நாம் படையினர் வெசாக் நாளில் பௌத்தக் கொடி ஏற்றுவதற்கிருந்த தடையை மீறிய பௌத்தர்கள் மீது சுட்டதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.
1978 – ரைன்ஹோல்ட் மெஸ்னெர், பீட்டர் எபெலர் இருவரும் முதற்தடவையாக ஆக்சிசன் ஊக்கி எதுவும் இல்லாமல் எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் மனிதர் எனற சாதனையை ஏற்படுத்தினர்.
1980 – பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1984 – டெனிசு லோர்ட்டி என்ற இராணுவ வீரர் கியூபெக் சட்டமன்றத்தினுள் புகுந்து சுட்டதில் மூவர் கொல்லப்பட்டனர், 13 பேர் காயமடைந்தனர்.
1997 – சீனாவில் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்தனர்.
2007 – புதிய வட அயர்லாந்து உயர் சபை அமைக்கப்பட்டது.
2017 – தமிழ் விக்கிப்பீடியாவில் 100,000-வது கட்டுரை எழுதப்பட்டது.
பிறப்புகள்
1521 – பீட்டர் கனிசியு, டச்சு-சுவிட்சர்லாந்து மதகுரு, புனிதர் (இ. 1597)
1737 – எட்வார்ட் கிப்பன், ஆங்கிலேய அரசியல்வாதி, வரலாற்றாளர் (இ. 1794)
1786 – ஜான் வியான்னி, பிரான்சியப் புனிதர் (இ. 1859)
1828 – ஹென்றி டியூனாண்ட், செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய சுவிட்சர்லாந்து தொழிலதிபர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1910)
1884 – ஹாரி எஸ். ட்ரூமன், ஐக்கிய அமெரிக்காவின் 33வது அரசுத்தலைவர் (இ. 1972)
1894 – பெஞ்சமின் கிரகாம், பிரித்தானிய-அமெரிக்கப் பொருளியல் நிபுணர் (இ. 1976)
1895 – புல்டன் சீன், அமெரிக்கப் பேராயர் (இ. 1979)
1899 – பிரீட்ரிக் கையக், நோபல் பரிசு பெற்ற ஆத்திரியப் பொருளியலாளர் (இ. 1992)
1916 – சின்மயானந்தா, இந்திய சமயத் தலைவர் (இ. 1993)
1924 – சு. வித்தியானந்தன், இலங்கைக் கல்விமான், தமிழறிஞர் (இ. 1989)
1926 – டேவிட் ஆட்டன்பரோ, ஆங்கிலேய சூழலியலாளர்
1953 – ரெமோ பெர்னாண்டஸ், போர்த்துகீச-இந்தியப் பாடகர்
இறப்புகள்
685 – இரண்டாம் பெனடிக்ட் (திருத்தந்தை) (பி. 635)
1794 – அந்துவான் இலவாசியே, பிரான்சிய வேதியியலாளர், உயிரியலாளர் (பி. 1743)
1821 – காலின் மெக்கன்சி, ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவன இராணுவ அதிகாரி, கீழ்த்திசை ஆய்வாளர் (பி. 1754)
1891 – எலனா பிளவாத்ஸ்கி, பிரம்மஞான சபையைத் தோற்றுவித்த உருசிய-ஆங்கிலேயர் (பி. 1831)
1936 – ஆசுவால்டு ஸ்பெங்கிலர், செருமானிய வரலாற்றாளர் (பி. 1880)
1951 – மு. நல்லதம்பி, ஈழத்துப் புலவர்
1972 – பாண்டுரங்க வாமன் காணே, இந்தியவியலாளர், சமக்கிருத அறிஞர் (பி. 1880)
1988 – ராபர்ட் ஏ. ஐன்லைன், அமெரிக்க அறிபுனை எழுத்தாளர் (பி. 1907)
1993 – தேவிபிரசாத் சட்டோபாத்தியாயா, இந்திய மார்க்சியப் புலமையாளர் (பி. 1918)
2008 – சி. நாகராஜா, இலங்கை வழக்கறிஞர், யாழ்ப்பாண மாநகர முதல்வர் (பி. 1931)
சிறப்பு நாள்
இரண்டாம் உலகப் போர் வெற்றி நினைவு நாள் (ஐரோப்பா)
வெண்தாமரை நாள் (பிரம்மஞானம்)
உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள்
பெற்றோர் நாள் (தென் கொரியா)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews