👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அரசு தொடக்க, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இதன்பேரில் தமிழகத்தில் கடந்த 2010ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை எழுத 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில், தேர்வு நடக்கும் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்த ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று மாலை தேதியை அறிவித்தது. அதன்படி ஜூன் மாதம் 8ம் தேதி தாள் ஒன்றுக்கான தேர்வும், தாள் இரண்டுக்கான தேர்வு 9ம் தேதியும் நடக்கும். இந்த இரண்டு தேர்வுகளும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U