👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் மூலம் 2019-20-ம் ஆண்டுக்கான வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பட்டயப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. வேளாண் பட்டயப்படிப்பிற்கு உறுப்பு கல்லூரிகளில் 290 இடங்களும், இணைப்புக் கல்லூரிகளில் 460 இடங்களும் உள்ளன.
தோட்டக்கலை பட்டயப்படிப்பிற்கு உறுப்புக்கல்லூரியில் 40 இடங்களும், இணைப்புக் கல்லூரியில் 70 இடங்களும் உள்ளன. பட்டயப்படிப்புகளுக்கான படிப்புக்காலம் 2 ஆண்டுகள். இப்பட்டயப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் நேற்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதில் முதல் நாளிலேயே 240 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்கள் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (
www.tnau.ac.in/admission.html) உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலமாக ஜூன்28ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து ஜூலை 3ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U