ஐ.ஐ.எம்.மில் படிக்கும் கார் ஓட்டுநரின் மகன்! கேட் தேர்வில் சாதித்தது எப்படி? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

ஐ.ஐ.எம்.மில் படிக்கும் கார் ஓட்டுநரின் மகன்! கேட் தேர்வில் சாதித்தது எப்படி?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
ஐ.ஐ.எம். அகமதாபாத் உலக அளவில் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் ஹிதேஷ் சிங் உணவு மற்றும் வேளாண் வர்த்தக மேலாண்மையில் இரண்டு ஆண்டுகள் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். அகமதாபாத் நகரைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐ.ஐ.எம். நிறுவனத்தில் படிக்க தகுதி பெற்று தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள ஆனந்த் என்ற ஊரைச் சேர்ந்தவர் பங்கஞ் சிங். இவர் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் தலைவராக இருக்கும் ஆர். எஸ். சோதியின் கார் டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மகன் ஹிதேஷ் சிங், கேட் (CAT) எனப்படும் பொது நுழைவுத் தேர்வில் 96.12 மதிப்பெண் பெற்று அகமதாபாத்தில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். ஐ.ஐ.எம். அகமதாபாத் உலக அளவில் சிறந்த 50 கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இதில் ஹிதேஷ் சிங் உணவு மற்றும் வேளாண் வர்த்தக மேலாண்மையில் இரண்டு ஆண்டுகள் முதுநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள இருக்கிறார். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் தலைவர் ஆர். எஸ். சோதி அடிக்கடி ஐஐஎம் அகமதாபாத்துக்குச் சென்று வருகைதரு பேராசிரியராக வகுப்பு நடத்துக்கிறார். அவர் அங்கு செல்லும்போது டிரைவராக ஹிதேஷின் அப்பா பங்கஞ் சிங்கும் உடன் செல்வது வழக்கம். இவ்வாறு அடிக்கடி அங்கு சென்ற பங்கஞ் சோதி வகுப்பு முடிந்து திரும்பி வரும் வரை காத்திருக்கும் நேரத்தில் வளாகத்தைச் சுற்றிப்பார்த்தபோது, தன் மகனும் இங்கே படிக்க வேண்டும் என ஆசை கொண்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த பங்கஞ் சிங்கின் குடும்பம் ஹிதேஷ் படிப்புக்காகவே குஜராத் மாநிலத்தில் ஆனந்த்க்கு இடம்பெயர்ந்துள்ளது. ஹிதேஷ் பள்ளிப் பருவம் முதலே சிறப்பாக படித்து வந்துள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் 97 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்கிறார். குஜராத்தி வழி கல்வியில் பயின்ற அவர், கேட் (CAT) தேர்வு எழுத மொழி ஒரு பிரச்னையாகவே இல்லை என்று கூறுகிறார். ஆனந்த் வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் பி.டெக் படித்த ஹிதேஷ் கல்லூரியிலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். பள்ளியில் படிக்கும்போதே கல்வி உதவித்தொகை பெற்று படிப்பைத் தொடர்ந்த ஹிதேஷ் ஐஐஎம்மில் படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், கல்விச் செலவுக்காக 23 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் வாங்க இருப்பதாகக் கூறுகிறார்.
ஹிதேஷ் படிப்புக்கு அவரது தந்தையைப் போலவே சோதி அவர்களும் சிறப்பாக ஊக்கம் அளித்துள்ளார். “ஹிதேஷ் புத்திசாலி மாணவர். நானும் என்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் அவருக்கு ஆலோசனைகள் வழங்குவோம். அவருக்கு உயரிய கல்வி நிறுவனத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. பால் பொருள் துறையில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கும்” என அவர் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார். சோதியின் ஆலோசனைகள் மூலம் பால் பொருள் துறையில் பணியாற்றப்போவதாகக் கூறும் ஹிதேஷ், இந்தியாவின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான அமுல் நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews