தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகளில் தடுமாறும் மாணவர்கள்: கல்வியாளர்கள் வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

தமிழக அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகளில் தடுமாறும் மாணவர்கள்: கல்வியாளர்கள் வேதனை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்கள், தடுமாற்றத்தை நோக்கி செல்வதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில், 30 சதவீத பள்ளிகளில் மட்டும், தொழிற்கல்வி பிரிவு பயிற்றுவிக்கப்படுகிறது. நர்சிங், வேளாண் பொறியியல், பொது இயந்திரவியல், ஆடையியல் போன்ற தொழிற்பிரிவுகளில், மாநிலம் முழுவதும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக தொழிற்கல்வி பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டில், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படித்த 34,628 பிளஸ் 2 மாணவர்களில், 25,548 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 73.78 ஆகும். இதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து தொழிற்பிரிவில் 21,727 மாணவர்கள் தேர்வெழுதி, 19,184 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 88.30 சதவீதம் ஆகும். ஆனால், நடப்பாண்டு அரசு பள்ளிகளில் 30,191 மாணவர்கள் தேர்வெழுதி, 23,429 பேர் தேர்ச்சி (77.60%) பெற்றுள்ளனர். அரசு உதவிபெறும் பள்ளிகளிலிருந்து தேர்வெழுதிய 20,004 மாணவர்களில், 17,763 பேர் தேர்ச்சி (88.80%) பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், மாணவர்களின் எண்ணிக்கை சரிவும், பாடம் சார்ந்த திறன் குறைவும் கணக்கில் கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டது. அதேசமயம், பல்வேறு எதிர்பார்ப்புடன் தொழிற்கல்வியில் சேரும் மாணவர்கள், அவர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் தவிப்பது தொழில்கல்வி பற்றிய பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ‘தமிழக பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவின் நிலை, சரிவை சந்தித்து வருகிறது. கற்றல், கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை தான், இதற்கு பிரதான காரணமாக கூறமுடியும். நடந்து முடிந்த 2019ம் ஆண்டு பிளஸ் 2 பொதுதேர்வில், தொழிற்கல்வி படித்தவர்களில் 82.70 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் முக்கிய பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இல்லை. ஓரிரு பாடங்களுக்கு 70 மதிப்பெண்ணிற்கு மட்டுமே எழுத்துத்தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்த அனைத்து மாணவர்களும், செய்முறை தேர்வையும் சேர்த்து வெறும் 35 மதிப்பெண் மட்டும் எடுத்து பார்டரில் தேர்ச்சி பெற்ற நிகழ்வுகளும் நடந்துள்ளன. பெரும்பாலான பள்ளிகளில், தொழிற்கல்வி பிரிவில் மாணவர்களை சேர்த்துக் கொண்டால் போதும் என்ற மனநிலை ஏற்பட்டு விட்டது. குறிப்பாக, உதவிபெறும் பள்ளிகளிலிருந்து இந்த தொழிற்கல்வி பிரிவுகளை நீக்கி விடக்கூடாது என்பதற்காகவே, மாணவர்களை சேர்க்கும் அவலமும் காணப்படுகிறது.
இன்ஜினியரிங் படிக்க ஏதுவாக இருக்கும் என நினைத்து, இப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. கணிதம் மற்றும் அறிவியல் படிக்கும் மாணவர்களே அதிகளவில் இன்ஜினியரிங்கிலும், நர்சிங்கிலும் சேர்கின்றனர். பாடம் சார்ந்த தனித்திறன் இல்லாத காரணத்தால் தான், பட்டப்படிப்பை நிறைவு செய்தும், தனியார் ஹோட்டல்கள், மருத்துவமனைகள், டெலிவரி பாய், மார்க்கெட்டிங் என சம்பந்தமில்லாத துறைகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயத்திற்கு இளைஞர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை மாற்ற, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பிரிவை நவீனப்படுத்த வேண்டும். இல்லையெனில், பெயரளவிற்கு செயல்பாட்டில் இருக்கும் அப்பிரிவுகளை முற்றிலுமாக நீக்கி விட்டு, மாற்று முறை கல்வியை புகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews