👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே பள்ளி ஆசிரியைகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கீரனூரை சுற்றிய பகுதிகளில் பள்ளிக்கு சென்று வரும் ஆசிரியைகளிடம் சகோதரர்கள் பாண்டியன், கார்த்திக், விஜய் ஆகிய மூவரும் கடந்த சில மாதங்களாக தங்க சங்கிலியை பறித்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்தனர்.இது குறித்து ஆசிரியைகள் அளித்த புகார்களின் பேரில், கொள்ளையர்களை பிடிக்க கீரனூர் டிஎஸ்பி பிரான்சிஸ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மண்டையூர் பகுதியில் போலீசாரின் வாகன சோதனையின் போது இந்த 3 பேரும், 3 சவரன் நகைகளுடன் பிடிபட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில், போலீசார் விசாரணை செய்ததில், பள்ளி ஆசிரியைகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டதை தெரிய வந்துள்ளது.இதனையடுத்து இவர்களிடம் இருந்து 7 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றிய போலீசார், இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U