👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் 14ம் தேதியன்று நடைபெறவுள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் சார்பில் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.
அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் 14-ஆம் தேதியன்று தொடங்குகின்றன.
நடைபெறும் இடம்:
எண். 6, கச்சாலீஸ்வரர் கோயில் லைன், அரண்மனைக்காரன் தெரு, பாரிமுனை, சென்னை-600 001 என்ற முகவரியில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத் திட்டத்துடன் உடல் நலன் மற்றும் மனநலம் குறித்த ஆலோசனையும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 98847 47217, 93449 51475, 94446 41712 ஆகிய எண்களுக்கு தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்
உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) மற்றும் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கான இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் விரைவில் தமிழக காவல்துறையில் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை உள்ளிட்ட 969 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பிடும் வகையில் தேர்வு நடைபெற உள்ளது.
த்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தின் www.tnusrbonline.org என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டும் ஏப்ரல் 19-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்புத்துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. மொத்த பணியிடங்கள் 8826.
இதில் கலந்துகொள்ளும் ஆண்கள் பெண்களுக்கு வழிகாட்டவும், தேர்வுக்கான இலவசப் பயிற்சியையும் சென்னை அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் இணைந்து எஸ்.ஐ. பணியிடங்களுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பை நடத்த உள்ளது.
இதுகுறித்து அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் கூறியுள்ளதாவது:
''அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எஸ்.ஐ. தேர்விற்கான பயிற்சி வகுப்பு வருகின்ற 14.4.2019 - ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் பாரிமுனை அரண்மனைக்காரன் தெரு, NO. 6, கச்சாலீஷ்வரர் கோயில் லைன் என்ற முகவரியில் தொடங்கும்.
பயிற்சியின் போது மாணவர்களுக்கு பாடத்திட்டத்துடன் உடல் திறன் மற்றும் மனநலம் பற்றிய ஆலோசனையும் வழங்கப்படுகிறது.
இதில் கலந்துகொள்ள விரும்பும் மாணவர்கள், மோகன் - 98847 47217, பாலாஜி - 93449 51475 வாசுதேவன் 94446 41712 என்கிற எண்களில் தொடர்பு கொண்டு பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
வகுப்பிற்கு வரும் மாணவர்கள் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பித்தின் Xerox copy-யை கட்டாயம் உடன் கொண்டுவரவும்''.
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U