5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு மறுப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 09, 2019

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு மறுப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 8ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வியடைய செய்யக் கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மறுத்துள்ளது. தமிழக அரசின் உத்தரவை மீறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என மத்திய அரசு அறிவிப்பு: அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏற்கனவே 5 முதல் 8ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருந்தது. இந்த நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. கல்வி உரிமைச் சட்டத்தில், 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு கொண்டு வருவது எனவும் அவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்யவும் மத்திய அரசு முடிவு செய்து அதற்கான திருத்தத்தை கொண்டு வந்தது. மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கொண்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் மத்திய அரசின் அறிவிப்புக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு இருந்தது. தமிழகத்திலும் இந்த நடைமுறையானது அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு மறுப்பு: ஆனால் தற்போது 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடியாது தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை சார்பில், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், 'எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடைய செய்யக் கூடாது. மீறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். 9ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு நடத்த வேண்டும் 'எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் ஆர்.டி.இ அதாவது இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்திருத்தத்தை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
பள்ளிக்கலவித் துறை இயக்ககம் அறிக்கையில் கூறியிருப்பதாவது: *6 முதல் 9 வகுப்பு வரை நடைபெற்று வரும் ஆண்டு இறுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. *தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டின் படி 3 பருவத் தேர்வுகளின் முடிவை கணக்கில் கொண்டு தேர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும். *9ம் வகுப்புக்கு பள்ளிக்கல்வி குழு தேர்ச்சி விதிகளின் படி தர நிலை முறையை பின்பற்றி தேர்ச்சியை நிர்ணயிக்க வேண்டும். *6 முதல் 9 வகுப்பு வரை தேர்ச்சி முடிவுகள் தேர்வுக்குழுவின் ஒப்புதலுக்குப் பின்னரே வெளியிடப்பட வேண்டும்.
*மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் 6 முதல் 8 வரை உள்ள வகுப்புக்கு கட்டாயத் தேர்ச்சி வழங்க வேண்டும். *6 - 9 வரை வகுப்புகளில் தேர்வு முடிவுகள் மே 2ம் தேதி முதன்மைக்கல்வி அலுவலரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட வேண்டும். *9ம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் 3ம் தேதி உடனடி மறு தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews