'இஸ்ரோ'வில் மாணவருக்கு 15 நாட்கள் பயிற்சி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 01, 2019

'இஸ்ரோ'வில் மாணவருக்கு 15 நாட்கள் பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
''மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர், கே.சிவன் தெரிவித்தார். இஸ்ரோ நிறுவனம், 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 'எமிசாட்' உட்பட, 29 செயற்கைக்கோள்களை, இன்று காலை, 9:27 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.'கவுன்ட் டவுன்'ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டின்,'கவுன்ட் டவுன்' நேற்று காலை, 6:27க்கு துவங்கியது.
இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், சிவன் அளித்த பேட்டி:பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரே ராக்கெட், மூன்று விதமான புவிவட்டப் பாதையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது. முதல் கட்டமாக, இஸ்ரோவின், எமிசாட் செயற்கைக்கோள், புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.பின், வேறு பாதையில், மற்ற செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து நிலைநிறுத்தப்படும். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்க்க, முதல் முறையாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கோடை விடுமுறையில், இஸ்ரோ மையங்களில், 15 நாட்கள் தங்கி, பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அதற்கு, நாடு முழுவதிலும் இருந்து, 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்; அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews