👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
ரஷியாவில் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்புகளை பயில விரும்பும் இந்திய மாணவர்கள் 100 பேருக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்குவதாக அந்நாடு அறிவித்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 2019-20 ஆண்டுக்கான ரஷிய அரசின் கல்வி உதவித் தொகை திட்டம் அறிவிக்கப்படுகிறது. இம்முறை விமான தொழில்நுட்பம், மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட துறைகளில் பட்டப் படிப்புகளை மேற்கொள்ளவுள்ள 100 இந்திய மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதியான மாணவர்கள் http://russia.study.ru என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம். தேர்வாகும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும். பொதுவாகவே ரஷிய மொழியில் கல்வி பயிலுபவர்களுக்கு மட்டுமே உதவித் தொகை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டில், மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும், டாம்ஸ்க் பாலிடெக்னிக் கல்லூரியும்
ஆங்கில வழியில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளன. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 044 - 2499 0050 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது சென்னையில் உள்ள ரஷிய கலாசார மையத்தையும் அணுகலாம் என்றார் அவர்.
இந்தச் சந்திப்பின்போது ரஷிய கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத் தூதர் யூரி எஸ். பிலோவ், ஸ்டடி அப்ராட் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி. ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்