TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 08, 2019

TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செல்லாது: மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் ரத்து செய்தது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017-ம்ஆண்டு தேர்வுநடத்தியது. இதில்ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 569 பேர்பங்கேற்று தேர்வு எழுதினர். தேர்ச்சிபெற்ற 2 ஆயிரத்துக்கும்மேற்பட்டோர் சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்டனர்.
இந்நிலையில் 196 பேர் வினாத்தாளில் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் காரணமாக இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு கடந்த 2018 பிப்.8 அன்று உத்தரவிட்டது.தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இந்த தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சரியானது தான் என தீர்ப்பளித்தார்.ஆனால் இதே கோரிக்கை தொடர்பாக உயர் நீதிமன்றமதுரைகிளையில் தொடரப்பட்ட வழக்கைவிசாரித்ததனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘குற்றச்சாட்டுக் குள்ளான 196 பேர் மீது மட்டும் நடவடிக்கை எடுத்துவிட்டு தேர்ச்சியடைந்த தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டார். மேல்முறையீடு சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தரப்பிலும், உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அரசு தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வந்தது.இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் பிறப்பித்தஉத்தரவு செல்லாது. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரின் விண்ணப்பங்களை மட்டும் நிராகரித்துவிட்டு, தேர்ச்சி பெற்ற பிற தகுதியான நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைகிளை பிறப்பித்துள்ள உத்தரவை நாங்கள் உறுதிசெய்கிறோம்.மேலும் இந்த நடைமுறைகளை வரும் ஏப். 30-க்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர். 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்தது செல்லாது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் ரத்து உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. முறைகேட்டில் ஈடுபட்ட 196 பேரை தவிர்த்து மற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி ஏப்ரல் 30-க்குள் பணி நியமன ஆணை வழங்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews