சீனாவில் பாலியல் தொழிலாளர் கல்விக் கூடங்களில் அந்நிய முதலீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

சீனாவில் பாலியல் தொழிலாளர் கல்விக் கூடங்களில் அந்நிய முதலீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
நாடு முழுவதும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிற பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன. அந்நாட்டு போலீசார் யாரையும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து 2 ஆண்டுகள் வரை இந்தச் சிறையில் அடைத்துவைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் பாலியல் தொழிலாளர்கள் சீர்திருத்த கல்விக்கூடம் என்ற பெயரில் இயங்கும் சிறைகளில் கொடுமைப்படுத்தப்படுவதாக அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். சீனாவின் நாடாளுமன்றமான தேசிய மக்கள் காங்கிரஸின் வருடாந்திரக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை முடிவுக்கு வந்திருக்கிறது. இதில் அந்நாட்டில் இயங்கிவரும் பாலியல் தொழிலாளர் மற்றும் பிற பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த கல்விக்கூடங்களில் அந்திய முதலீட்டை அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சீனாவில் அமலில் இருந்த பாலியல் தொழிலாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம் கடந்த 2013ஆம் ஆண்டு ரத்துசெய்யப்பட்டது. அந்தத் திட்டத்தின் கீழ் பாலியல் தொழிலாளர்களுக்கு தொழில் பயற்சி முகாம்களை நடத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டது. இத்திட்டம் ரத்தானதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் பிற பாலியல் குற்றவாளிகளுக்கான சீர்திருத்த கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டன. அந்நாட்டு போலீசார் யாரையும் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்து 2 ஆண்டுகள் வரை இந்தச் சிறையில் அடைத்துவைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் அந்நாட்டு போலீசார் பிரபல நடிகர் ஹுஆங் ஹைபோ என்பவர் ஒரு பெண்ணை பாலியல் தொழிலாளியாகத் தூண்டியதாகக் குற்றம்சாட்டி 6 மாதங்களுக்கு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது.
இந்த சீர்திருத்தக் கல்விக்கூடங்கள் எனப்படும் சிறைகளில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் பற்றி Asia Catalyst என்ற சிறுபான்மையினர் நல அமைப்பு ஆய்வு செய்துள்ளது. இதன் அடிப்படையில், அந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் மோசமாக நடத்தப்படுகிறார்கள், கடுமையான வேலைகளைச் செய்ய வைக்கப்படுகிறார்கள், முறையான மருத்துவ வசதிகூட இல்லை என பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. பாலியல் தொழில் அதிகமாக நிலவும் நாடுகளில் ஒன்றான சீனாவில் இது போன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகளை மீறி, பல லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. "பீஜிங் நகரில் உள்ள சிறைகளில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான பாலியல் தொழிலாளர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட பின் அவர்கள் போலீஸ் கண்காணிப்பு அதிகம் இல்லாத புறநகர் பகுதிகளில் வசிக்கிறார்கள் எனவும் மீண்டும் அதே தொழிலைத் தொடரும் அவர்கள் வாடிக்கையாளர்களை ஆன்லைன் மூலம் தொடர்புகொண்டு, அவர்கள் சொல்லும் இடத்துக்குத் தேடிச் செல்கிறார்கள்" என Asia Catalyst அமைப்பைச் சேர்ந்த ஷென் டிங்டிங் கூறுகிறார்.
"ஏற்கெனவே சீனாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தில் பாலியல் தொழிலாளர்களுக்கு 5000 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் 50,000 ரூபாய்) அபராதம் முதல் 15 நாட்கள் சிறை தண்டனை அளிக்கப்படுகிறது. இதுவே போதுமான தண்டனைதான்." எனவும் ஷென் கூறுகிறார். பாலியல் தொழிலாளர்களை சீர்திருத்தும் சீர்திருத்தக் கல்விக்கூடங்கள் எனக் கூறிக்கொண்டு நடத்தப்படும் சிறைக்கூடங்களால் எந்த பயனும் இல்லை எனவும் இந்தக் சீர்திருத்தக் கல்விக்கூடங்களை ஒழித்தாலும் பாலியல் தொழிலாளர்களிடம் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடாது எனவும் அவர் ஷென் கூறுகிறார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews