பொறியியல் கலந்தாய்வு நடத்துவது யார்? அரசின் மெத்தனத்தால் மாணவர்கள் கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

பொறியியல் கலந்தாய்வு நடத்துவது யார்? அரசின் மெத்தனத்தால் மாணவர்கள் கவலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. குறிப்பாக, கலந்தாய்வை நடத்தப்போவது அண்ணா பல்கலைக்கழகமா தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமாக என்பது உறுதியாகவில்லை வரும் கல்வி ஆண்டில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வை நடத்துவதில் ஏற்பட்டிருக்கும் குளறுபடியால் மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. தமிழகத்தில் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 19ஆம் தேதி (நாளை) முடிகிறது. இன்னும் மாநில உயர்கல்வித்துறை சார்பில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு எப்போது என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. குறிப்பாக, கலந்தாய்வை நடத்தப்போவது அண்ணா பல்கலைக்கழகமா தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகமாக என்பது உறுதியாகவில்லை.
கடந்த 22 ஆண்டுகளாக பொறியியல் கலந்தாய்வு நடத்துவது அண்ணா பல்கலைக்கழகம்தான். அண்மையில் தமிழ்நாட்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கமிட்டி தலைவர் பதவியிலிருந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கே. சூரப்பா ராஜினாமா செய்தார். கமிட்டியில் உயர்கல்வித்துறை செய்த மாற்றங்களுக்கு அதிருப்தி தெரித்து ராஜினாமா செய்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த ஆண்டு பொறியில் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகத்துக்குப் பதிலாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் என்று தகவல் வெளியானது. ஆனால் இது பற்றி உயர்கல்வித்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை.
இந்த குழப்பத்தால் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டால் அது மாணவர்களின் படிப்பைப் பாதிக்கும் என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் கலந்தாய்வு எப்போது என்பதை அறிந்துகொண்டுதான் பிற மாநிலங்களின் கலந்தாய்வில் பங்கேற்பது பற்றி முடிவு எடுக்க முடியும் என்பதால் பொறியியல் கலந்தாய்வுக்கான நடவடிக்கை எடுப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். "கடந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலையில் நடத்தது. அதற்கான ஆயத்தப்பணிகள் ஏப்ரல் மாதமே தொடங்கப்பட்டது. ஏப்ரல் மாதத்துக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசு மெத்தனமாக இருப்பது மாணவர்களையே அதிகம் பாதிக்கும்" என அண்ணா பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews