கல்வி, தொழிலக கட்டடத்திற்கு அனுமதி நடைமுறையில் மாற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 19, 2019

கல்வி, தொழிலக கட்டடத்திற்கு அனுமதி நடைமுறையில் மாற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகத்தில், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளூர் அதிகாரிகளே அனுமதி வழங்கலாம்&' என, நகர், ஊரமைப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளுக்கும் பொதுவான, பொது கட்டட விதிகள், பிப்ரவரி, 4ல் அறிவிக்கப்பட்டன. இதன்படி, கட்டுமான திட்டங்கள், உயரத்தின் அடிப்படையில், இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.ஆறு மாடிகள் வரையிலான குடியிருப்பு கட்டடங்களுக்கு ஒப்புதல் வழங்கும் அதிகாரம், டி.டி.சி.பி.,யின் உள்ளூர் திட்ட குழும, மண்டல அலுவலகங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிற வகை கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம், தலைமை அலுவலகத்திலேயே இருக்குமா என்ற, கேள்வி எழுந்தது.
இந்நிலையில், ஆறு மாடிகள் வரையிலான கல்வி நிறுவன மற்றும் தொழிற்சாலை கட்டுமான திட்டங்களுக்கு, உள்ளூர் அளவிலேயே ஒப்புதல் வழங்க, டி.டி.சி.பி., அனுமதி அளித்துள்ளது.பொது கட்டட விதிகளில், குறிப்பிடப்பட்டுள்ள உயர கட்டுப்பாடுகளை கவனத்தில் வைத்து, புதிய திட்டங்களுக்கு, உள்ளூர் அதிகாரிகள் ஒப்புதல் வழங்கலாம். இதற்கான சுற்றறிக்கையை, டி.டி.சி.பி., ஆணையர், ராஜேஷ் லக்கானி பிறப்பித்துள்ளார். - நமது நிருபர் -
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews