பயிற்சி வகுப்புக்கு, 'டிமிக்கி' தேர்தல் ஆணையம் எச்சரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 26, 2019

பயிற்சி வகுப்புக்கு, 'டிமிக்கி' தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை வரை ரூ.33 கோடியே 46 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது: தமி ழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை வரை ரூ.33 கோடியே 46 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டுள்ளது. இதில், ரூ.4 கோடியே 45 லட்சம் ஏற்கெனவே திருப்பி யளிக்கப்பட்டுள்ளது. வெள்ளி இது வரை 317 கிலோ பறிமுதலாகி யுள்ளது. நாகையில் அதிமுகவினரும் கடலூரில் திமுகவினரும் அளித் ததாக தலா 100 பெட்ரோல் டோக்கன்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக தகவல் கிடைத் துள்ளது. இவ்வாறு அவர் தெரி வித்தார். தொடர்ந்து செய்தியாளர் கள் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:
கட்சிகளின் முக்கிய பிரமுகர் கள், வேட்பாளர்கள் தங்கள் கட்சிக் காரர்களுக்கு அதிக வாக்குகள் பெற்றுத்தந்தால் பைக், ரொக்கப் பரிசு அறிவிப்பது சரியா? இதுபோன்ற அறிவிப்புகள் பொதுமக்கள் மத்தியில் வெளியிட் டால் அது நடத்தை விதிகளை மீறியதாகும். இருப்பினும் இவை லஞ்சம் தருதல் என்ற அடிப்படை யில் எடுத்துக் கொள்ளப்படும். இதுதொடர்பாக அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆய்வு செய்து வழக்குப்பதிவு செய்வார்கள். நடத்தை விதிகள் என்பவை சட்டமல்ல; அரசியல் கட்சிகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட விதிகள் மட்டுமே. அதிக அளவில் விதிகளை மீறினால் முதலில் எச் சரிக்கையும் பின்னர் வாக்குப் பதிவை நிறுத்தி, வேட்புமனுவும் ரத்து செய்யப்படும்.
கடும் வெயிலில் அரசியல் கட்சி கள் பிரச்சார கூட்டத்தை நடத்து கின்றனவே? தேர்தல் ஆணையம் அறிவுறுத் தல் மட்டும்தான் வழங்கியுள்ளது. உத்தரவுபோட முடியாது. நிழற் கூரைகள், போதுமான குடிநீர் உள் ளிட்ட வசதிகளை கட்சிகள் செய்து தர வேண்டும்.
தேர்தல் பணியாளர்களுக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் அனைவரும் பங்கேற்றார்களா? ஒரு சில மாவட்டங்களில் 7 சதவீதம் வரை வருகை குறைவாக இருந்தது. வராதவர்களுக்கு மீண் டும் பயிற்சியளிக்கப்படும். சில பணியாளர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதை சுட்டிக்காட்டி விலக்கு கோரியுள்ளனர். தேர்தல் பணிக்கு வராதவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பணியில் ஈடுபடும் மூன்றரை லட்சம் பணியாளர்கள், 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர், கல்லூரி தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், வெப்கேமரா இயக்குபவர்களுக்கு தபால் ஓட்டு வசதிகள் செய்யப்படும்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் முடிந்ததா? வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தலுக்காக நடந்த 2 நாள் முகாம் மற்றும் ஆன்லைனில் கடந்த 16-ம் தேதி வரை 8 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. இதில் 95 சதவீதம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இப்பணி கள் நாளை (மார்ச் 26-ம் தேதி) முடிவடையும். இவ்வாறு சத்யபிரத சாஹு பதிலளித்தார்.
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews