👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
முதலிபாளையம் இன்குபேஷன் மையம், பல்கலை மற்றும் கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுவருகிறது.
திருப்பூர், முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லுாரி வளாகத்தில், மத்திய அரசு உதவியுடன், ஆடை உற்பத்தி துறைக்கான இன்குபேஷன் மையம் இயங்கி வருகிறது. இந்த மையம், புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளுக்கு, செயல்வடிவம் கொடுப்பது; தயாரிக்கும் பொருட்களை சந்தைப்படுத்த வழிகாட்டுகிறது.
மாணவர்கள், பேராசிரியர்களிடம் உள்ள புதிய தகவல்களை பெற்று, வடிவம் கொடுப்பதற்காக, இன்குபேஷன் மையம், பல்கலை, கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுவருகிறது.அவிநாசிலிங்கம் பல்கலை, கொங்கு கலை அறிவியல் கல்லுாரி, கலைஞர் கருணாநிதி பொறியியல் கல்லுாரி, சேலம் பெரியார் பல்கலையுடன், இன்குபேஷன் மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து, இன்குபேஷன் மைய தலைவர் பெரியசாமி கூறியதாவது:இன்குபேஷன் மையத்தில், புதுவகை ஆடை தயாரிப்புக்கான மெஷினரிகள், ஆய்வக வசதிகள் உள்ளன. பேராசிரியர்கள், மாணவர்களிடம், ஆடை உற்பத்தி, பொறியியல், டிசைனிங் உள்பட பல்வேறு துறை சார்ந்த தகவல்கள் ஏராளம் உள்ளன.இவற்றுக்கு செயல்வடிவம் கொடுப்பதன்மூலம், ஆடை உற்பத்தி உற்பத்தி துறைக்கு தேவையான புதிய நுட்பங்களை உருவாக்க முடியும்.
இதற்காகவே, இன்குபேஷன் மையம், பல்கலை, கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது.இந்த ஒப்பந்தம் மூலம், மாணவர்கள், பேராசிரியர்கள், ஆடை உற்பத்தி, டிசைன் நுணுக்கங்கள், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, சந்தைப்படுத்தும் நுட்பங்களை எளிதாக தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. மாணவர்கள் எதிர்காலத்தில், தொழில்முனைவோராக மாறுவதற்கும், இந்த ஒப்பந்தம் கைகொடுக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்